‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
சமீபகாலமாக இசையமைப்பாளர்களும் ஹீரோக்களாக வலம் வரத் தொடங்கிவிட்டனர். விஜய் ஆண்டனி, ஜி.வி.பிரகாஷ்குமார் ஆகியோர் ஹீரோக்களாக நடித்து வருகின்றனர். தேவிஸ்ரீ பிரசாத், அனிருத், ஸ்ரீகாந்த் தேவா உள்ளிட்ட சிலர் பாடல் காட்சிகளில் நடித்து வருகின்றனர். அதேபோல் ஏ.ஆர்.ரகுமான், யுவன் ஷங்கர் ராஜா உள்பட பலர் இசை ஆல்பங்களில் நடித்துள்ளனர். இப்படி இசையமைப்பாளர்களும் திரையில் முகம் காட்டி வரும் நிலையில், யுத்தம் செய், முகமூடி, காடு, ஆரோகனம், கிருமி உள்பட பல படங்களுக்கு இசையமைத்திருக்கும் கே, கள்ளப்படம் என்ற படத்தில் ஒரு இசையமைப்பாளர் கேரக்டரில் நடித்திருந்தார். ஆனால், தொடர்ந்து தான் இசையமைக்கும் படங்களின் இயக்குனர்கள் நடிக்கக் கேட்டுக்கொண்டும் அதை ஏற்க அவர் மறுத்து வருகிறார்.
இதுகுறித்து கே கூறுகையில், கள்ளப்படம் படத்தில் இசையமைப்பாளர் வேடத்திலேயே நடிக்கச் சொன்னதால் நடித்தேன். மற்றபடி தொடர்ந்து நடிக்கும் ஆர்வம் என்னிடம் இல்லை. அதனால்தான் மறுத்து வருகிறேன். அதேசமயம், இசையில் புதுமைகள் செய்ய வேண்டும் என்பதில்தான் எனது முழு ஆர்வமும் உள்ளது. அந்தவகையில், நான் இதுவரை இசையமைத்துள்ள படங்களில் மலையாளத்தில் பஹத்பாசில் நடித்த அன்னயும் ரசூலும் படத்துக்கு ரொம்ப நல்ல பெயர் கிடைத்தது. அந்த படத்தைப்பார்த்துதான் என்னை கிருமி படத்துக்கு புக் பண்ணினர். காரணம் இந்த படத்தில் பின்னணி இசைக்கு அவ்வளவு முக்கியத்துவம் உள்ளது. அதனால், கதைக்கும், காட்சிக்கும் ஏற்ப இயல்பான பின்னணி இசையை கொடுத்துள்ளேன் என்று கூறும் கே, இந்த கிருமி படம் தமிழில் எனக்கு திருப்புமுனையாக அமையும் என்கிறார்.