‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
இந்தியா பாகிஸ்தான் படத்தை அடுத்து விஜய் ஆண்டனி நடித்து வரும் படம் பிச்சைக்காரன். சொல்லாமலே சசி இயக்கி வரும் இந்த படம் ஒரு சமூக பிரச்சினையை மையக்கருவாகக் கொண்டு உருவாகிறது. குறிப்பாக பிறக்காத பேரனுக்காக சொத்து சேர்க்கும் நபர்களை வெளுத்து வாங்குகிறதாம் படக்கதை. அதோடு, இந்த படத்தில் விஜய் ஆண்டனி நிஜ பிச்சைக்காரனாக நடிக்கவில்லை. ஒரு பிரச்சினைக்காக அவர் பிச்சைக்காரன் போல் தலைமறைவாகி நடிக்கிறார். அதற்காக பிச்சைக்காரர்கள் அதிகமாக கூடும் கோயில் வாசல்களில் அதிகமான காட்சிகள் படமாக்கப்பட்டிருக்கிறது. அதோடு, பிச்சைக்காரர்கள் உருவாவது பற்றிய ஒரு தத்துவப்பாடலும் இந்த படத்தில் உள்ளது.
மேலும், இந்தியா பாகிஸ்தான் படத்தில் விஜய் ஆண்டனி நடித்து வந்தபோது இந்த பிச்சைக்காரன் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பை முடித்து விட்டார் சசி. ஆனால், சமீபத்தில்தான் வசன காட்சிகளை படமாக்கி முடித்துள்ளனர். ஆனபோதும் இன்னும் இரண்டொரு பாடல் காட்சிகள் படமாக்கப்பட வேண்டியுள்ளதாம்.
இதற்கிடையே, நவம்பரில் படம் ரிலீஸ் என்று செய்தி வெளியிடப்பட்டுள்ள நிலையில், தற்போது அப்படத்தின் எடிட்டிங் வேலைகளை முடுக்கி விட்டிருக்கிறார் சசி. மொத்த எடிட்டிங் பணிகளும் முடிந்தபிறகு ஏதேனும் காட்சிகளை ரீஷூட் பண்ண வேண்டுமென்றால் பேலன்ஸ் உள்ள பாடலை படமாக்கும்போது அதையும் சேர்த்து படமாக்க திட்டமிட்டுள்ளார்களாம்.