‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
இசைஞானி இளையராஜாவின் மூத்த மகன் கார்த்திக் ராஜாவின் இசையில் விரைவில் நடைபெற இருக்கும் "பட்டணத்தில் பூதம்" இசை நாடகத்தி்ல், தனித்திறமையுள்ளவர்கள் பங்கேற்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
இதற்கான கதையை கார்த்திக் ராஜாவே எழுதியுள்ளார். வசனத்தை, பா.விஜய் எழுதியுள்ளார். இந்த நாடகத்தின் உடை அலங்காரங்களை, வாசுகி பாஸ்கர் மேற்கொள்ள உள்ளார். இந்த நாடகத்தில், நாசர், அவரது மகன் லுத்பூதீன் பாஷா, பிரசன்னா, நந்தினி ரவீந்திரன், பாடகர்கள் ராகுல் நம்பியார், ஹரீஷ் மற்றும் பாடகி சின்மயி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
இந்த நாடகம் குறித்து, கார்த்திக் ராஜா சமீபத்தில் கூறியிருந்ததாவது, பட்டணத்தில் பூதம் நாடகம், குழந்தைகளுக்கான நாடகம் ஆகும். இதற்கான ஒத்திகை தற்போது துரிதமாக நடைபெற்று வருகிறது. நான் சிறுவனாக இருக்கும்போதே, அலாவுதீனும் அற்புத விளக்கும் படத்தை பார்த்து வியப்படைந்துள்ளேன். அதில் வரும் அனைத்து காட்சிகளும் எனக்கு மிகவும் பிடிக்கும். அப்சல்யூட் மேஜிக் என்ற பெயரில், கடந்த ஆண்டு தயாரிப்பு நிறுவனம் துவக்கியிருந்தோம். முதல்நிகழ்ச்சியாக, மதுரையில், அப்பா இளையராஜாவின் இசை நிகழ்ச்சியை நடத்தினோம். இந்த ஆண்டு புதிதாக, ஏதாவது செய்ய வேண்டும் என்பதனடிப்படையில், இந்த குழந்தைகள் நாடகத்தை நடத்த உள்ளோம். இந்த நாடகம், சென்னை மியூசிக் அகாடமியில், செப்டம்பர் 16ம் தேதி பிரீமீயர் ஷோவும், அதனைத்தொடர்ந்து, செப்.,.18 முதல் 20ம் தேதி வரை நாடகம் நடத்தப்பட உள்ளது என்று கூறினார்.
முன்னணி நட்சத்திரங்கள் மட்டுமல்லாது, தனித்திறமைகள் கொண்ட அனைவரும் இதில் பங்கேற்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஆடிசன், செப்டம்பர் 2 மற்றும் 3ம் தேதிகளில், சென்னை மியூசிக் அகாடமியில் நடைபெற உள்ளது.