‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
தமிழ்நாட்டில் தங்களது படம் 100 நாள் ஓடியது என்று சொல்ல வைப்பதற்காக படத்தை ஓட்டிய பல சம்பங்கள்தான் நடந்துள்ளன, இன்னமும் நடந்து வருகின்றன. ஆனால், அப்படி ஒரு வெற்று சாதனைக்காக எங்களது பாகுபலி படத்தை ஓட்டிக் கொண்டிருக்க மாட்டோம் என இயக்குனர் ராஜமௌலி தெரிவித்துள்ளார். அவருடைய ஒவ்வொரு அணுகுமுறையும் உண்மையாகவும் வித்தியாசமாகவும் உள்ளதாக தெலுங்குத் திரையுலகினர் பிரமித்துப் போயுள்ளனர். இந்தக் காலத்தில் இப்படி ஒரு இயக்குனரா என அவர்கள் ஆச்சரியப்படுகிறார்கள்.
ராஜமௌலி நேற்று அவருடைய டிவிட்டர் பதிவில் கூறியுள்ளதாவது, “50, 100, 175 நாட்கள் என்பதெல்லாம் கடந்த காலத்தில் நடந்தது. இன்று படங்கள் ஆயிரம் திரையரங்குகளில் வெளியானால் 3, 4 வாரங்கள் மட்டும் ஓடுவதுடன் முடிவடைந்துவிடும். சில முக்கிய திரையரங்குகள் மட்டும் இப்போதும் ஷேர் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். மற்றபடி பாகுபலி படத்தின் ஓட்டம் முடிந்துவிட்டது. ஆனால், சில ரசிகர்கள் படத்தை மேலும் ஓட வைப்பதற்கும், அவர்களது கையில் இருந்து பணத்தைக் கொடுப்பதும், அதற்கு சில திரையரங்க வெளியீட்டார்களும் கேட்பதும் வருத்தமடைய வைக்கிறது.
தவறான சாதனைகளை வைத்துக் கொண்டு நாம் என்ன செய்யப் போகிறோம். ரசிகர்கள் எங்களுக்கு மறக்க முடியாத வெற்றியைத் தந்திருக்கிறார்கள். அது மீதமுள்ள எங்களது வாழ்நாளுக்கெல்லாம் மறக்க முடியாத ஒன்றாகும். இதற்கு மேல் வேறென்ன வேண்டும். நமது திரையுலகம் இப்படி விஷயங்களில் சிக்கிக் கிடக்கிறது. அதற்கு நாமும் உடந்தையாக வேண்டாம். இத்துடன் இதை நிறுத்திக் கொள்வதற்கு இதுதான் சரியான நேரம். எங்கெல்லாம் ஷேர் வருகிறதோ அங்கு மட்டுமே பாகுபலி ஓடும். அப்படிச் செய்யாமல் இருந்தால் மற்ற புதிய படங்களும் அதை தொடர்வார்கள். தவறான சாதனைகளுக்காக தியேட்டர்களை பிளாக் செய்ய மாட்டோம்,” என்று ராஜமௌலி தெரிவித்துள்ளார்.