‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
தற்போது 76 வயதான கவுண்டமணி வாய்மை, 49ஓ படங்களைத் தொடர்ந்து எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். தற்போது அப்படத்தின் இறுதிகட்ட பணிகள் துரிதமாக நடந்து கொண்டிருக்கிறது. கவுண்டமணி படங்களைப் பொறுத்தவரை எப்போதுமே கலாய்ப்புக்கு பஞ்சமிருக்காது. அந்தவகையில், இந்த படத்திலும், சினிமா, அரசியல் என்று செம நக்கல், நய்யாண்டி செய்து நடித்துள்ளார் கவுண்டர்.
மேலும், இந்த படத்தில் நடிப்பதற்கு அவர் ரூ. 70 லட்சம் சம்பளம் வாங்கியிருப்பதாக கூறப்படும் நிலையில், அடுத்தபடியாக அவர் ஹீரோவாக நடிப்பதற்கு இரண்டு கம்பெனிகள் துரத்திக்கொண்டிருக்கிறார்களாம். எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் படத்தில் அவர் நடித்து வந்தபோதே படப்பிடிப்பு தளத்துக்கு சென்று கதை சொன்னார்களாம். அதில் ஒன்று போலீஸ் கதையாம்.
அந்த கதையை துருவி துருவி கேட்ட கவுண்டமணி, அது விஜயகாந்த், அர்ஜூன் போன்ற ஆக்சன் நடிகர்கள் நடிப்பது போன்று இருப்பதை அறிந்து, அந்த டைரக்டரை மேலிருந்து கீழாக பார்த்தவர், ஏன் உடம்பு இப்ப இருக்கிற கண்டிசன்ல நான் காக்கி சட்டை போட்டு நடிக்க முடியுமா? அதோடு, விஜயகாந்த், அர்ஜூன் மாதிரி நான் சண்டை போட்டு நடிக்கிறதெல்லாம் நடக்கிற காரியமா? வேற யாராச்சும் நல்ல நடிகரா பாத்துக்கோங்க தம்பி என்று சொல்லி திருப்பி அனுப்பி விட்டாராம்.
இருப்பினும், அந்த படத்தில் கவுண்டமணியை போலீஸ்காரராக நடிக்க வைத்தே தீருவது என்று அந்த டைரக்டர் விடாமல் துரத்தி வருகிறாராம்.