‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
அஜீத் நடிக்க, சிறுத்தை சிவா இயக்கும், ஏ.எம். ரத்னம் தயாரிக்கும் படத்தின் தலைப்பு இன்னமும் இறுதி செய்யப்படவில்லை எனவே தல56 என்று ஊடகங்கள் எழுதி வருகின்றன. அஜீத் படத்தைப் பொறுத்தவரை கதைக்கும் படப்பிடிப்புக்கு கூட தயாராகி விடுகிறார்கள் தலைப்பு கிடைப்பதற்குள் போதும் போதும் என்றாகி விடுகிறது. முன்பு தாமதித்து யோசித்து கடைசியாக ஆரம்பம் என்று வைத்தார்கள் பிறகு அடுத்த படத்திற்கு என்னை அறிந்தால் என்று வைத்தார்கள். படப்பிடிப்பு முடிவடையும் நிலையை எட்டியபின்னும் இன்னும் புதிய படத்துக்கு தல56க்கு தலைப்பு முடிவாகவில்லை.
இதைவிட தலையாய பிரச்சினை தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னத்துக்கு வந்திருக்கிறது. தான் நடிக்கும் படங்களின் ஆடியோ விழா, படஅறிமுக விழாக்களுக்கு படத்தின் நடிகர்கள் வரவேண்டும் குறிப்பாக கதாநாயக நடிகர்கள் வரவேண்டும்.ஆனால் அஜீத் சமீப ஆண்டுகளில் இதற்கெல்லாம் வருவதே இல்லை. இதுபற்றி தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக இருந்த போது கேயார் இனி விழாவுக்கு வருவதற்காக சம்பளத்தில்20 சதவிகிதம் பிடித்து வைத்துக் கொள்ளவேண்டும், வந்த பின்தான் அதைத் தர வேண்டும் என்றார். அப்போதும் அஜீத் கண்டு கொள்ளவில்லை. அஜீத் மட்டும் வருவதில்லை, நாங்கள் மட்டும் வரவேண்டுமா? என்று மற்ற நடிகர்கள், இது பற்றி தொடர்ந்து சர்ச்சையாக்கவே, இப்போது ரத்னத்தின் படவிழாவுக்குக் கண்டிப்பாக அஜீத்தை அழைத்து வரவேண்டும் என்று ரத்னத்திடம் தயாரிப்பாளர் கவுன்சில் கிடுக்கிபிடி உத்தரவு போட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.