தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் | நாக சைதன்யா, பூஜா ஹெக்டேவை இயக்கும் விருபாக்ஷா இயக்குனர் | ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' | தெலுங்கிற்கே முன்னுரிமை தரும் 'குபேரா' குழு | ஒரு அப்டேட் கூட வரவில்லை, வருத்தத்தில் அஜித் ரசிகர்கள் | இளம் இசையமைப்பாளர் பிரவீண் குமார் மரணம் | ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை | ‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் |
மோகன்லால் மலையாள நடிகர்தான் என்றாலும் கிட்டத்தட்ட அவரும் தமிழ்நாட்டை சேர்ந்தவர் மாதிரிதான். பின்னே தமிழ்நாட்டு மருமகன் இல்லையா..? சென்னையில் பல இடங்களில் அவரது வீடுகள் இருக்கின்றன. அதனால் மோகன்லாலுக்கு சென்னை பாசம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். அது அவ்வப்போது அவரது படங்களிலும் வெளிப்படும். 'உதயநாணுதாரம்' என்கிற படத்தில் கேரளாவில் இருந்து சென்னைக்கு வந்து தங்கி, உதவி இயக்குனராக பணியாற்றி, இங்கேயே படம் இயக்க வாய்ப்பு தேடி அலைவார் மோகன்லால்.
அதேபோல ரஞ்சித் இயக்கத்தில் உருவான 'ராக் அன்ட் ரோல்' படத்தில் இசையமைப்பாளரான நடித்திருக்கும் மோகன்லால் சென்னைனையை சேர்ந்தவராக இருப்பார். தன்னிடம் பாடகி வாய்ப்பு கேட்டு வரும் லட்சுமிராய் மீது காதல் வயப்படும் மோகன்லால், சென்னையில் உள்ள தனது இசைக்குழு மற்றும் ரவுடி நண்பர்களின் உதவியால் காதலில் ஜெயிப்பதாகவும் காட்சிகள் அமைந்திருந்தன.
இப்போது நேற்று வெளியாகியுள்ள 'லோஹம்' படத்தில் கூட கோழிக்கோட்டில் கார் ட்ரைவராக நடித்திருக்கும் மோகன்லால், அந்த ஊர் ட்ராபிக் பற்றி ஆண்ட்ரியாவிடம் பேசும்போது “சென்னை மாதிரி பாலங்கள் இங்க இருக்கணும் மேடம்.. சென்னையை கண்டு நம்ம ஆட்கள் படிக்கணும்” என திரும்ப திரும்ப சென்னையின் பிரமாண்ட பாலங்கள் குறித்து வசனம் பேசுவதான காட்சிகள் சென்னை தியேட்டர்களில் ரசிகர்களின் கைதட்டலை அள்ளுகின்றன.