‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
முன்னணி ஒளிப்பதிவாளராக பிஸியாக இருந்த கே.வி.ஆனந்துக்கு இயக்குநராகும் ஆசை ஏற்பட்டதும் தன் முதல்ப்படமாக ஸ்ரீகாந்தை வைத்து கனா கண்டேன் படத்தை இயக்கினார். கடல்நீரிலிருந்து குடிநீராக்கும் திட்டம் பற்றிய அப்படம் வெற்றியடைந்தது. அடுத்து சூர்யாவை வைத்து அயன் படம் இயக்கினார். கமர்ஷியலாக மிகப்பெரிய வெற்றியடைந்தது அயன். அடுத்து ஜீவாவை வைத்து கோ என் படத்தை இயக்கினார். இதுவும் வெற்றிப்படம். ஹாட்ரிக் வெற்றிப்படம் கொடுத்த பிறகு கே.வி.ஆனந்த் முன்னணி இயக்குநர்கள் வரிசையில் இடம்பிடித்தார். நான்காவது படமாக மாற்றான் என்ற படத்தை இயக்கினார். சூர்யா ஹீரோவாக நடித்த மாற்றான் மிகப்பெரிய தோல்விப்படமாகிப்போனது. அடுத்து தனுஷை வைத்து அனேகன் என் படத்தை இயக்கினார். மாற்றான் படத்தைத் தயாரித்த கல்பாத்தி அகோரமே அனேகன் படத்தையும் தயாரித்தார். இந்தப்படமும் தோல்வியடைந்தாலும், கே.வி.ஆனந்தை வைத்து அடுத்தப்படத்தைத் தயாரிக்கவும் தயாராகவே இருக்கிறார் கல்பாத்தி.
தன்னை நம்பி கல்பாத்தி அகோரம் மீண்டும் படம் பண்ண தயாராக இருப்பதைக் கண்டு மகிழ்ச்சியடைந்த கே.வி.ஆனந்த், அஜித்தை வைத்து படம் இயக்க எண்ணி அவரை அணுகி உள்ளார். ஆனந்த் சொன்ன ஒன்லைனைக் கேட்ட அஜித் அக்கதையில் நடிக்க ஆர்வம் காட்டி இருக்கிறார். ஆனால் அவரது சம்பளம், பட புரமோஷனுக்கு ஒத்துழைக்காதது போன்ற காரணங்களை எல்லாம் கூட்டிக்கழித்துப்பார்த்த கல்பாத்தி அகோரம், அஜித் வேண்டாம் வேறு ஹீரோவைப் பார்த்து கதை சொல்லுங்கள் என்று சொல்லிவிட்டாராம்.