‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
அஜ்மல், ரூபா மஞ்சரி நடித்த திரு திரு துறு துறு படத்தை இயக்கியவர் ஜே.எஸ்.நந்தினி. இவர் தற்போது மேற்கத்திய நாடுகளில் வருவதைப் போன்ற டிஜிட்டல் கிராபிக்ஸ் நாவல் ஒன்றை எழுதியுள்ளார். முன்பு வெளிவந்த படக்கதைகளை கொண்ட காமிக்ஸ் புத்தங்களின் நவீன வடிவமே டிஜிட்டல் கிராபிக்ஸ் நாவல். இதில் வரும் கதாபாத்திரங்கள் ஓவியமாக தீட்டப்பட்டு அவைகள் டிஜிட்டல் கிராபிக்ஸ் உதவியால் நகரும், வசனமும், பின்னணி இசையும் ஒலி வடிவில் இருக்கும். இப்படி ஒரு டிஜிட்டல் கிராபிக்ஸ் நாவலை சிவப்புக்கல் மூக்குத்தி என்ற பெயரில் நந்தினி உருவாக்கி உள்ளார்.
இதுபற்றி நந்தினி கூறியதாவது: திரு திரு துறு துறு படத்திற்கு பிறகு திருமணம் செய்து கொண்டேன். சின்ன பிரேக் எடுத்துவிட்டு ஒரு ஸ்கிரிப்ட் தயார் செய்தேன். அதை படமாக்க ஆரம்பித்தபோது தயாரிப்பாளருக்கு பிரச்னை ஏற்பட்டு அது தடைபட்டு விட்டது. சரி அடுத்து என்ன செய்வது என்று நினைத்தபோதுதான் வெளிநாடுகளில் பாப்புலராக உள்ள டிஜிட்டல் கிராபிக்ஸ் நாவலை உருவாக்க முடிவு செய்தேன். இரண்டு வருட உழைப்புக்கு பிறகு இதனை கிராபிக்ஸ் டிசைனர்கள் மகேஷ், சாய்நாத், ஜெரால்டு ஆகியோரின் உதவியுடன் உருவாக்கினேன். அமானுஷ்ய சக்தியிடம் சிக்கிக்கொண்ட மனைவியை காப்பாற்றும் கணவனின் கதை. அமேசான் நிறுவனத்தின் கிண்டில் ஃபன்னி வோர்ல்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதனை இணைய தளத்தில் டவுன் செய்து பார்க்கலாம்.