எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு | தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் | நாக சைதன்யா, பூஜா ஹெக்டேவை இயக்கும் விருபாக்ஷா இயக்குனர் | ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' | தெலுங்கிற்கே முன்னுரிமை தரும் 'குபேரா' குழு | ஒரு அப்டேட் கூட வரவில்லை, வருத்தத்தில் அஜித் ரசிகர்கள் | இளம் இசையமைப்பாளர் பிரவீண் குமார் மரணம் | ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை | ‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா |
2013-ல் செந்தூரப்பூவே ராம்கி ரீ-என்ட்ரி ஆன படம் மாசாணி. அப்படத்தில் அவருக்கு ஜோடியாக வாகை சூடவா இனியா நடித்திருந்தார். பத்மராஜ்-எல்ஜிஆர் இணைந்து இயக்கியிருந்த அந்த படத்தில் ரோஜா, ஒய்.ஜி.மகேந்திரன், ஆடுகளம் நரேன் உள்பட பலர் அப்படத்தில் நடித்திருந்தனர்.மேலும், திரில்லர் கதையில் உருவான அப்படத்தில் இனியாதான் லீடு ரோலில் நடித்தார். ஆனால் படம் பெரிதாக ஓடவில்லை. ஆனால் அந்த படத்தில் ஆரம்பித்த சறுக்கல் இனியாவை தொடர்ந்ததால் இப்போதுவரை அவரால் விட்ட இடத்தை பிடிக்கவே முடியவில்லை.
இந்தநிலையில், அந்த மாசாணி படத்தை இயக்கிய பத்மராஜ்-எல்ஜிஆர் இருவரும் இணைந்து அடுத்தபடியாக காந்தாரி என்றொரு படத்தை இயக்க தயாராகிக் கொண்டிருக்கின்றனர். இந்த படமும் கதாநாயகியை மையப்படுத்தும் கதை என்பதால், தங்களது முதல் படமான மாசாணியில் நடித்த இனியாவையே நடிக்க வைக்கலாம் என்ற முடிவில் இருக்கிறார்களாம். ஆனால் ஒருவேளை மாசாணியை மனதில் வைத்துக்கொண்டு இனியா நடிக்க மறுத்தால், வேறு நடிகையிடம் கால்சீட் கேட்கும் முடிவில் இருக்கிறார்களாம்.