அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் | 7 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வருகிறார் அதிதி பொஹங்கர் | மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார் | இன்னும் 6 நாட்களில் ஓடிடிக்கு வரும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
நீதானே என் பொன் வசந்தம், யான் உட்பட ஜீவா நடித்த பல படங்கள் வரிசையாக தோல்வியடைந்ததினால் பட வாய்ப்பு இல்லாமல் சில காலம் வீட்டில் உட்கார்ந்திருந்தார். புதுப்பட வாய்ப்புகள் தேடி வராதநிலையில் திருநாள் படத்தை தானே தயாரிக்கும் முடிவுக்கு வந்தார். திருநாள் படத்தில் நயன்தாரா கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்ட பிறகு, ஜீவாவுக்கு அடித்தது அதிர்ஷ்டம். வரிசையாக புதுப்படங்கள் தேடி ஆரம்பித்துவிட்டன.
ஆர்யாவை வைத்து வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க படத்தை இயக்கி உள்ள ராஜேஷ் அடுத்து இயக்கும் படத்தில் ஜீவாதான் ஹீரோ. ராஜேஷ் இயக்கிய முதல் படமான சிவா மனசுல சக்தி படத்தை தொடர்ந்து ஜீவாவும், ராஜேஷும் இணையும் படம் இது. தற்போது வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க படத்தின் வெளியீட்டு வேலை மற்றும் புரமேடாஷன் வேலைகளில் பிசியாக இருக்கிறார் ராஜேஷ்.
ஜீவாவுக்காக ஏற்கெனவே ஒரு ஒன் லைன் ஸ்டோரியை ரெடி பண்ணி வைத்திருக்கிறாராம். எனவே டென்ஷன் இல்லாமல் ரிலாக்ஸ்டாக இருக்கும் ராஜேஷ், VSOP படம் வெளியானதும் ஜீவாவை வைத்து இயக்கவிருக்கும் புதுப்படத்திற்கான ஸ்கிரிப்ட் வேலைகளை துவங்க திட்டமிட்டிருக்கிறாரம்!
ஜீவா தற்போது கவலை வேண்டாம், திருநாள் என இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்களுடன் ராஜேஷ் இயக்கும் புதிய படத்திலும் நடிக்க இருக்கிறார் ஜீவா. மற்றும் தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும் படத்தை இயக்கிய இயக்குநரின் படத்திலும் நடிக்க இருக்கிறார்.