ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் |
ஆடுகளம் படத்திற்கு பிறகு வெற்றிமாறன் இயக்கி உள்ள படம் விசாரணை. இந்தப் படம் வெனிஸ் சர்வதேச திரைப்பட விழாவில் போட்டி பிரிவில் பங்கேற்க தேர்வாகி உள்ளது. இதுபற்றி வெற்றி மாறன் கூறியதாவது:
முன்பு எனக்கு சர்வதேச பட விழாக்கள் பற்றித் தெரியாது. ஆடுகளம் படத்தை பார்த்த அனுராக் காஷ்யப், இதை ஏன் சர்வதேச படவிழாக்களுக்கு அனுப்பவில்லை என்று கேட்டு அதுபற்றி பல தகவல்களைச் சொன்னார். அதன் பிறகுதான் காக்கா முட்டை படத்தை அனுப்பினேன். இப்போது விசாரணை படத்தை அனுப்புகிறேன்.
விசாரணை வெறும் கற்பனை கதையல்ல. சந்திரகுமார் என்ற இளைஞரின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவங்களை கொண்டது. இதனை அவரே லாக்அப் என்ற பெயரில் நாவலாக எழுதியிருக்கிறார். அதை திரைக்கதையாக்கி படமெடுத்திருக்கிறேன். ஏதாவது ஒரு விஷயம் என்னை பாதித்ததால்தான் அதனை நான் படமாக எடுப்பேன். ஆடுகளம் படத்திற்கு பிறகு அப்படி எந்த பாதிப்பும் எனக்கு வரவில்லை. அதனால்தான் காலதாமதம் ஏற்பட்டது. சந்திரகுமாரின் லாக்அப் நாவல் பாதிப்பை ஏற்படுத்தியது அதனை தற்போது இயக்கி இருக்கிறேன். அக்டோபர் மாதம் தியேட்டர்களில் வெளிவருகிறது. அடுத்து தனுஷ் நடிக்கும் படத்தின் கதையை தயார் செய்து விட்டேன். அந்தப் பணிகள் தீபாவளிக்கு பிறகு துவங்குகிறது என்கிறார் வெற்றிமாறன்.