‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
நாட்டில் எது நடந்தாலும் உடனே அதை வைத்து முடிந்த வரைக்கும் பெயரை வாங்கத் துடிப்பவர்களாக சிலர் இருக்கிறார்கள். அந்த சமயத்தில் எது நடந்தாலும் அந்த பிரச்சனைக்கு ஏற்ப ஆதரவு கொடுத்தோ, எதிர்ப்புக் குரல் கொடுத்தோ தங்களை செய்திகளில் வரவைத்துவிடுவார்கள். அப்துல் கலாம் மறைவின் போது பல நட்சத்திரங்களும் தங்களது அனுதாபத்தைத் தெரிவிக்கும் வகையில் டிவிட்டரிலாவது அனுதாபத்தைத் தெரிவித்தார்கள். அவர்களாவது பரவாயில்லை, பலருக்கு அதற்குக் கூட நேரம் கிடைக்கவில்லை.
அந்த சமயத்தில் கேரளாவில் நாய்கள் கொல்லப்படுவதை எதிர்த்து விஷால் உள்ளிட்டவர்கள் போராட்டமும் நடத்தினார்கள். நாய்கள் கொல்லப்படுவதை ஆதரிப்பவர்களுக்கு எதிராக பகிரங்கமாகவே தனது எதிர்ப்புக்களையும் த்ரிஷா பதிவு செய்தார்.