‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
நடிகர் விஷால் சமீப நாட்களாக கடும் கண்டனத்துக்குள்ளாகி வருகிறார். நடிகர் சங்க விவகாரத்தில் எதிர் தரப்பினரிடம் அடிக்கடி வாங்கிக் கட்டிக் கொள்கிறார் விஷால். இந்த தாக்குதல் அவர் எதிர்பார்த்ததுதான் என்றாலும், மற்ற பிரச்சனைகளில் கருத்து சொல்லியும் கல்லடிபடுகிறார். கேரளாவில் நாயை கொல்வதற்கு எதிராக விஷால் சொன்ன கருத்துக்கு மலையாளிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது.
இந்நிலையில் அப்துல் கலாம் இறந்ததும் சினிமா நடிகர்கள் யாரும் அவருக்கு அஞ்சுலி செலுத்தப்போகாதது குறித்து கண்டனங்கள் எழுந்தன. இதுகுறித்து கருத்து தெரிவித்த விஷால் அது என் தனிப்பட்ட விருப்பத்தைப் பொறுத்தது என்று கருத்து தெரிவித்திருக்கிறார். விஷால் இப்படி சொன்னதைக்கேட்டதும் மக்கள் பொங்கி எழுந்துவிட்டனர்.
“உங்கள் தியேட்டரில் போய் பார்ப்பதும்... திருட்டு விசிடியில் பார்ப்பதும் எங்களின் தனிப்பட்ட விருப்பம். அப்படி இருக்க திருட்டு விசிடிக்கு எதிராக சவுண்ட் கொடுப்பது ஏன்?” என்று தொடங்கி சகட்டுமேனிக்கு விஷாலை கழுவி ஊற்றி வருகின்றனர்.