போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
காஞ்சனா -2 படத்தை அடுத்து வேந்தர் மூவிஸு'க்காக 'மொட்ட சிவா கெட்ட சிவா', 'நாகா' என இரண்டு படங்களையும் இயக்கி, நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார் ராகவா லாரன்ஸ். இவற்றில் 'மொட்ட சிவா கெட்ட சிவா' படத்தை இயக்கி நடிக்க ராகவா லாரன்ஸ் வாங்கிய சம்பளம் 14 கோடி. சம்பளத் தொகையில் ராகவா லாரன்ஸுக்கு 1 கோடி ரூபாய் முன்பணமாக வழங்க முன்வந்தது 'வேந்தர் மூவிஸ்' நிறுவனம். அப்போது முன்பணத்தை வாங்க மறுத்த லாரன்ஸ், தொடக்கவிழா அன்று வாங்கிக்கொள்கிறேன் என்று கூறினாராம்.
அதன்படி நேற்று நடைபெற்ற விழாவில் அவருக்கு 1 கோடி முன்பணம் வழங்கப்பட்டது. இந்த 1 கோடி ரூபாயை தன்னை வாழ வைத்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு கொடுக்கப் போவதாக அறிவித்தார் ராகவா லாரன்ஸ். ரசிகர்களுக்கு எப்படி பணம் கொடுக்க முடியும் என்று அனைவரும் குழம்பியபோது தன் திட்டத்தை விவரித்தார் லாரன்ஸ்.
அதாவது, மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாமின் பெயரில் 'கலாமின் காலடிச்சுவட்டில்...' என்ற அமைப்பை உருவாக்கி அதன் மூலம் இந்த உதவிகளை செய்ய இருக்கிறார் ராகவா லாரன்ஸ். தமிழகத்தில் உள்ள நேர்மையான 100 இளைஞர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களிடம் தலா 1 லட்சம் வழங்க இருக்கிறார் ராகவா லாரன்ஸ். அந்த 100 இளைஞர்கள் மூலமாக ஏழை மாணவ மாணவிகளின் கல்விக்காக இந்த தொகையை செலவிடப் போவதாக தெரிவித்தார். இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சாத்தியக்கூறுகள் குறித்து ஐ.ஏ.எஸ். அதிகாரியான இறையன்புவிடம் ஆலோசனைகளைக் கேட்டுள்ளார் ராகவா லாரன்ஸ். அவரும் தக்க ஆலோசனைகளை சொல்லி அனுப்பினாராம்.