இளம் இசையமைப்பாளர் பிரவீண் குமார் மரணம் | ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை | ‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி |
ஆர்யா நடித்துள்ள 'வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க, யட்சன்' ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளிவர உள்ளன. 'வாசுவும்...' அடுத்த வாரம் வெளியாக உள்ளது, 'யட்சன்' அடுத்த மாதம் வெளியாக உள்ளது. விஷ்ணுவர்தன் இயக்கும் இந்த 8வது படத்தில் அவருடன் ஆர்யா 5வது முறையாக நடிக்கிறார். இதற்கு முன் இருவரும் இணைந்து 'அறிந்தும் அறியாமலும், பட்டியல், சர்வம், ஆரம்பம்' ஆகிய படங்களில் பணிபுரிந்திருக்கிறார்கள். நேற்று 'யட்சன்' படத்தின் இசை வெளியீட்டை முன்னிட்டு பத்திரிகையாளர் சந்திப்பும் நடைபெற்றது.
அப்போது பேசிய ஆர்யா, என்னை அனைத்து மக்களிடமும் கொண்டு சேர்த்தவர் யுவன்ஷங்கர் ராஜா என்று பாராட்டினார். 'அறிந்தும் அறியாமலும்' படத்தில் இடம் பெற்ற 'தீப்பிடிக்க தீப்பிடிக்க...முத்தம் கொடுடா...' என்ற பாடல்தான் ஆர்யாவை மக்களிடம் அதிகமாக அடையாளப்படுத்தியது. அதற்கு முன்பே அவர் 'உள்ளம் கேட்குமே' படத்தில் அறிமுகப்படுத்தப்பட்டவர்தான் என்றாலும் 'அறிந்தும் அறியாமலும்' படம்தான் முதலில் வெளிவந்தது.
“25 படம் நான் பண்ணியிருக்கன்னா அதுல 28 படங்களுக்கு அவர் இசையமைச்சிருக்காரு, ஏன்னா என் படங்களுக்கு எக்ஸ்ட்ராவா மியூசிக் போடுவாரு. 'தீப்பிடிக்க...'ல இருந்து ஆரம்பிச்சது, என்னை எல்லாருக்கும் தெரிய வச்சது. அந்த 'தீப்பிடிக்க...' பாட்டுல வர்ற பையன்பா இவன்னு பேச ஆரம்பிச்சாங்க. ரொம்ப நன்றி யுவன்,” என யுவனை மறக்காமல் நன்றி கூர்ந்தார் ஆர்யா.