வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் | 7 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வருகிறார் அதிதி பொஹங்கர் | மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார் | இன்னும் 6 நாட்களில் ஓடிடிக்கு வரும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | பிளாஷ்பேக்: 14 வயதில் பாட்டு... 21 வயதில் தேசிய விருது... 37 வயதில் மரணம் | ஏஆர் முருகதாஸை புகழ்ந்து பேசிய ஆமிர்கான் | மதுரை, கல்லம்பட்டி-யில் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு |
தமிழில், எனக்கு 20 உனக்கு 18 படத்தில் என்ட்ரியானவர் ஸ்ரேயா. ஆனபோதும் ஜெயம்ரவியுடன் நடித்த மழை படம்தான் அவரை முழுசாக அடையாளம் காட்டியது. அந்த படத்தில் மழையில் நனைந்தபடி ஸ்ரேயா போட்ட கவர்ச்சியாட்டம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததால் அதையடுத்து குறுகிய காலத்தில் முன்னணி நடிகையாகி விட்டார். அதோடு பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினியுடன் நடித்த சிவாஜி படம் ஸ்ரேயாவை உச்ச நடிகையாக்கியது. அதனால் அதன்பிறகு விக்ரமுடன் கந்தசாமி படத்தில் நடித்தார். ஆனால் அந்தபடம் ப்ளாப் ஆனதால் ஸ்ரேயாவின் மார்க்கெட்டும் தடாலடியாக கவிழ்ந்தது. அதனால் வடிவேலுவுடன் இந்திரலோகத்தில் நா.அழகப்பன் படத்தில் அயிட்டம் பாடலுக்கு நடனமாடும் நிலைக்கு தள்ளப்பட்டார் ஸ்ரேயா. பின்னர் தமிழில் படங்கள் குறைந்து விட்டதால் வடக்கு நோக்கி சென்ற அவர், தெலுங்கில் நாகார்ஜூனாவுடன் மனம் படத்தில் நடித்த பிறகு இந்தியில் த்ரிஷ்யம் ரீமேக்கில் நடித்துள்ளார். அப்படம் கடந்த ஜூலை 31-ந்தேதி வெளியானது. அப்படத்தில் டீன்ஏஜ் பெண்ணுக்கு அம்மாவாக நடித்ததை அடுத்து, இனிமேல் இமேஜ் பார்க்கப்போவதில்லை என்று ஓப்பனாக அறிவித்திருக்கிறார் ஸ்ரேயா. அந்த அறிவிப்பை தென்னிந்திய சினிமாவுக்கு வேகமாக பாஸ் பண்ணியுள்ள ஸ்ரேயா, விரைவில் இங்கு வந்து தனது அபிமானத்திற்குரிய டைரக்டர்களிடம் வித்தியாசமான கேரக்டர்களில் நடிக்க சான்ஸ் கேட்கவும் முடிவெடுத்திருக்கிறாராம்.