‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
கன்னட முன்னணி ஹீரோக்களில் முன்னணியில் இருப்பவர் நடிகர் சிவராஜ்குமார். கன்னட சூப்பர்ஸ்டாராக கோலோச்சிய மறைந்த நடிகர் ராஜ்குமாரின் வாரிசுகளில் மூத்தவர். 51வயதான இவரது மூத்த மகள் நிருபமாவின் திருமணம் நாளை நடைபெற உள்ளது. இதற்காக இரண்டு வாரங்களுக்கு முன்பே சென்னை வந்து தமிழகத்தில் உள்ள சினிமா மற்றும் அரசியல் வி.ஐ.பிகளை தனது மனைவியுடன் நேரில் சந்தித்து திருமண அழைப்பிதழ் கொடுத்து அழைத்துவிட்டு சென்றார் சிவராஜ்குமார்.
குறிப்பாக தனது தந்தையின் நெருங்கிய நண்பரான சூப்பர்ஸ்டார் ரஜினி, மற்றும் தான் இவருடன் ஒரு படத்திலாவது இணைந்து நடித்துவிடமாட்டோமா என ஏங்கிக்கொண்டிருக்கும் கமல், தனது தந்தை காலத்தில் இருந்தே குடும்ப உறவு பாராட்டி வரும் சிவாஜி இல்லத்திற்கு சென்று பிரபு, ராம்குமார், தன்னுடன் நட்புக்காக ஒரு படத்தில் இணைந்து ஆடிய சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலரையும் நேரில் சந்தித்து அழைப்பிதழ் தந்தார்.
அதேபோல, தெலுங்கு, மற்றும் தனது கன்னட திரையுலகை சேர்ந்த முக்கியஸ்தர்கள் அனைவர் வீட்டுக்கும் சிறியவர், பெரியவர் பேதம் பார்க்காமல் சிவராஜ்குமாரும் அவரது மனைவியும் நேரிலேயே வந்து அழைப்பிதழ் கொடுத்ததில் அவர்களுக்கு அளவில்லாத சந்தோசம்.. ஆனாலும் ஒரு சில கன்னட திரையுலக புள்ளிகளுக்கு மட்டும் அழைப்பிதழ் விஷயத்தில் சின்னதாக ஒரு வருத்தம்.
அதாவது சிவராஜ்குமார் முதன்முதலாக கன்னட சினிமா உலகினருக்கு பத்திரிகை வைக்காமல், தமிழ், தெலுங்கு திரையுலகினருக்கு பத்திரிகை வைத்தது, அதிலும் குறிப்பாக முதன்முதலாக ரஜினி வீட்டுக்கு சென்று அழைப்பிதழ் தந்தது குறித்து முணுமுணுத்து வருகிறார்களாம். இருந்தாலும் திருமண விஷயம் என்பதால் இதை பெரிதுபடுத்தி சிவராஜ்குமாரை சங்கடத்தில் ஆழ்த்தவும் விரும்பவில்லையாம்.