பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்கினார் ராகவா லாரன்ஸ் | அப்பாவாக நடிப்பது பெருமை: சமுத்திரகனி | அபிநந்தனாக நடிப்பதே கஷ்டமாக இருந்தது: பிரசன்னா | பார்த்தால் பசிதீரும், பத்ரி, வீரம் - ஞாயிறு திரைப்படங்கள் | சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... |
திறமை இருந்தால் 60 வயதிலும் சினிமாவில் சாதிக்க முடியும் என்று நிரூபித்தவர் பரவை முனியம்மா. கோவில் திருவிழாக்களில் நாட்டுப்புற பாடல்களை பாடிக்கொண்டிருந்தவரை தூள் படத்தில் அறிமுகப்படுத்தினார் தரணி. "ஏய் சிங்கம்போல நடந்து வாரான் செல்லப் பேராண்டி..." என்ற பாடலோடு அறிமுகமாகி 73 படங்களில் பாடிவிட்டும், நடித்து விட்டும் இன்று பரவை கிராமத்தில் உள்ள சிறிய வீட்டுக்குள் முடங்கிவிட்டார்
பத்து மாதத்திற்கு முன்பு கணவர் இறந்து விட்டார். சமீபத்தில் மருமகள் இரண்டு குழந்தையை தவிக்கவிட்டு இறந்து விட்டார். மகனுக்கு மனநிலை சரியில்லை. மூன்று பேரையும் தள்ளாத வயதில் கவனிக்க வேண்டிய பொறுப்பு பரவை முனியம்மாவுக்கு. தற்போது அவரால், பாடவும் ஆடவும் முடியாததால் ரேஷன் அரசி வாங்கி காலத்தை தள்ளுகிறார். சம்பாதித்தபோது கட்டிய வீட்டை இரண்டாக பிரித்து முன்பகுதியை வாடகைக்கு விட்டு அந்த வருமானத்தில் கஷ்ட ஜீவனம் நடத்துகிறார்.
பரவை முனியம்மாவின் இறுதிக் காலம் இத்தனை வறுமையாகி போனது திரையுலகினருக்கு அதிர்ச்சி அளிக்கிறது. அவர் பீக்கில் இருந்த காலத்தில் அவர் சம்பாதித்த பணம் எங்கே போனது என்ற கேள்விக்கு பரவை முனியம்மாவுக்கே விடை தெரியவில்லை. "யாரையும் குறை சொல்லவிரும்பல எல்லாம் என் தலைவிதி" என்று மட்டும் சொல்கிறார். கடந்த சில தினங்களுக்கு முன் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்ட பரவை முனியம்மா மதுரை தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது நிலையை அறிந்த தனுஷ் அவருக்கு 5 லட்சம் ரூபாய் கொடுத்து உதவ முன்வந்திருக்கிறார். விஷால் அவரது மருத்துவ செலவை ஏற்க முன்வந்திருக்கிறார். இதேப்போல் சிவகார்த்திகேயனும் உதவி வருகிறார்.
தமிழக அரசு ரூ.6 லட்சம் நிதியுதவி
இந்நிலையில் பரவை முனியம்மாவின் பரிதாப நிலையை பார்த்து அவருக்கு உதவ முன் வந்துள்ளது தமிழக அரசு. பரவை முனியம்மாவிற்கு ரூ.6 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். அவரது மருத்துவ சிகிச்சைக்கான தொகையை எம்.ஜி.ஆர்., அறக்கட்டளை வழங்கும் எனவும் என்றும், குடும்பத்திற்கு மாதந்தோறும் ரூ.6000 வழங்கப்படும் எனவும் ஜெ., அறிவித்துள்ளார்.