ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் |
திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் (பெப்சி) திடீரென ஊதியத்தை உயர்த்தியால் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்தது. இதனால் 40 பெரிய படங்கள் உள்பட அனைத்து படங்களின் படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டது.
வேலை நிறுத்தம் நடந்தபோதும் பெப்சி அமைப்புடன் தயா£ரிப்பாளர் சங்கம் தொடர்ந்து ஊதிய உயர்வு பற்றி பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. கடந்த 3 நாட்களாக நடந்த தொடர் பேச்சு வார்த்தை நேற்று மாலை முடிவுக்கு வந்தது. அதன் பிறகு தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் ஒரு அறிக்கை வெளியிட்டது.
அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கும், பெப்சிக்கும் இடையே 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை சம்பள பேச்சு நடக்கும். இந்த ஆண்டு சம்பள பேச்சு சுமூகமாக சென்று கொண்டிருந்த நிலையில் சண்டை இயக்குனர்கள் மற்றும் சண்டை கலைஞர்கள் சங்கத்தினுடனான பேச்சு வார்த்தை மட்டும் நிலுவையில் உள்ளது. மற்ற சங்கங்களுடன் ஒப்பந்தம் ஏற்பட்டு விட்டதால் படப்பிடிப்பு, பின்னணி இசை, டப்பிங், எடிட்டிங் பணிகளை தொடர்வது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் மறைவையொட்டி 30ந் தேதி மட்டும் எந்த பணிகளும் நடக்காது 31ந் தேதி முதல் அனைத்து பணிகளும் தொடங்கும். சங்க உறுப்பினர்கள் சம்பள விபர பட்டியலை தயாரிப்பாளர் சங்கத்தில் பெறலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.