நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் | ரஜினியுடன் இணைந்து நடனமாடும் அனிரூத்? | தக் லைப் படத்தின் புதிய அப்டேட் | ரஜினியின் வாழ்க்கை வரலாற்று படத்தை தயாரிக்கும் பாலிவுட் தயாரிப்பாளர்? | ரஜினியின் ‛கூலி' படத்திற்கு நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா | 'ஒளியை உணர்கிறேன்' : பிரேக்-அப்பிற்குப் பிறகு ஸ்ருதிஹாசன் |
விஜய்யின் பி.ஆர்.ஓ.வான பி.டி.செல்வகுமார், ஷிபு தமீம் என்ற கேரள விநியோகஸ்தர் உடன் இணைந்து புலி படத்தை தயாரித்து வருகிறார். தன் பி.ஆர்.ஓ. என்ற அடிப்படையிலேயே அவருக்கு கால்ஷீட் கொடுத்து புலி படத்தில் நடித்தும் வருகிறார் விஜய். புலி படம் விரைவில் வெளியாக உள்ளநிலையில் தன் அடுத்தப் படங்களை திட்டமிட்டுவிட்டார் பி.டி.செல்வகுமார். புலி படத்தை அடுத்து மூன்று படங்களை தயாரிக்க இருக்கிறார். இந்தப் படங்களை தயாரிக்க உள்ள இயக்குநர்களுக்கு அட்வான்ஸ் கொடுத்துவிட்டார். இயக்குநர் ஹரி, இயக்குநர் ராஜேஷ் எம், மற்றும் தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும் படத்தை இயக்கிய ராம்பிரகாஷ் ராயப்பா ஆகிய மூவர்தான் அவர்கள். அவற்றில் ராஜேஷ் எம் இயக்கும் படம்தான் முதலில் தொடங்கப்பட உள்ளது. இந்தப்படத்தில் ஜீவா கதாநாயகனாக நடிக்கிறார். அடுத்து ஹரி இயக்கும் படத்தைத் தயாரிக்க இருக்கிறார். அனேகமாக இந்தப் படத்தில் விஜய் நடிக்கலாம் என்று தெரிகிறது. தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும் இயக்குநரின் படத்திலும் ஜீவாதான் நடிக்கிறார். இந்த மூன்று படங்களையும் பி.டி.செல்வகுமார் தனியாகவே தயாரிக்கிறார்.