பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்கினார் ராகவா லாரன்ஸ் | அப்பாவாக நடிப்பது பெருமை: சமுத்திரகனி | அபிநந்தனாக நடிப்பதே கஷ்டமாக இருந்தது: பிரசன்னா | பார்த்தால் பசிதீரும், பத்ரி, வீரம் - ஞாயிறு திரைப்படங்கள் | சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... |
சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் புலி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா மகாபலிபுரத்தில் உள்ள தனியார் ரிசார்ட்டில் ஆகஸ்ட் 2 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த விழாவுக்கு நடிகர் கமல்ஹாசன், பாலிவுட் நடிகர் சல்மான்கான், தெலுங்கு ஹீரோ சிரஞ்சீவி மற்றும் மகேஷ்பாபு ஆகியோரை சிறப்பு விருந்தினராக அழைத்திருக்கிறார்கள். இவர்கள் யாருடைய வருகையும் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்று சொல்லப்படுகிறது. எனவேதான் புலி படத்தின் இசைவெளியீட்டுவிழா அழைப்பிதழில் யாருடைய பெயரும் இடம்பெறவிலை.
இந்நிலையில் புலி இசைவெளியீட்டு விழாவுக்கு தன்னால் வர இயலாது என்று கூறிவிட்டாராம் கமல். தூங்காவனம் பட வேலைகள் இருப்பதை காரணம் காட்டி விழாவுக்கு வர முடியவில்லை என்று சொல்லிவிட்டாராம். கமல் வரவில்லை என்பதால் மகேஷ்பாபு மற்றும் சல்மான்கான் இருவரையும் எப்படியாவது புலி விழாவுக்கு அழைத்து வந்துவிட வேண்டும் என்று தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர்.
மகேஷ்பாபுவின் படங்களுக்கு இசையமைத்தவகையில் தேவிஸ்ரீபிரசாத்துக்கு மகேஷ்பாபு நல்ல பழக்கமாம். எனவே மகேஷ்பாபுவை அழைத்து வரும் பொறுப்பை தேவிஸ்ரீபிரசாத்திடம் ஒப்படைத்துள்ளனர். புலி படத்தின் ஒளிப்பதிவாளரான நட்ராஜ் சல்மான்கான் படங்களில் பணியாற்றியவர். எனவே நட்ராஜ் மூலம் சல்மான்கானை அழைத்து வர முயற்சி நடக்கிறது.