இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் | ரஜினியுடன் இணைந்து நடனமாடும் அனிரூத்? |
கோலிவுட்டில் தற்போது நடிகர் சங்க தேர்தல் விவகாரம்தான் அக்னி நட்சத்திர வெயிலாய் அனல் பறந்து கொண்டிருக்கிறது. சரத்குமார், ராதாரவி அணி ஒரு பக்கமும், விஷால், நாசர் அணி இன்னொரு பக்கமும் அரசியல்வாதிகளைப் போன்று தீவிர வாக்குசேகரிப்பில் வரிந்து கட்டி வருகிறார்கள்.
அதோடு, யாராவது நடிகர் நடிகைகள் உதவி என்று குரல் கொடுத்தால் நான் நீயென்று போட்டிபோட்டுக் கொண்டு உதவிக்கரம் நீட்டி வருகிறார்கள். அதோடு எங்கள் அணி ஜெயித்தால் உங்களுக்கு இந்தந்த சலுகைகளை யெல்லாம் செய்வோம் என்றும் அரசியல் பாணியில் வாக்குறுதிகளை வாரி வழங்கி வருகிறார்கள்.
இந்தநிலையில், பல இளவட்ட நடிகர் நடிகைகள் எந்தெந்த பக்கம் இருக்கிறார்கள் என்பது ஓரளவு தெரிந்து விட்டது என்றாலும், ஜெயம்ரவி போன்ற சிலர் வாயே திறக்காமல் கமுக்கமாக இருக்கிறார்கள். அதனால் இதுபற்றி ஜெயம்ரவியிடம் சிலர் கேட்டதற்கு, நான் எந்த அணிக்கு ஆதரவு கொடுக்கிறேன் என்பது சஸ்பென்ஸ். ஆனால், கண்டிப்பாக நியாயத்தின் பக்கம்தான் நிற்பேன். அது நடிகர் சங்க தேர்தல் முடிவுக்கு பிறகு உங்களுக்கே தெரியும் என்கிறார்கள்.
அதைக்கேட்டு, ஒருவேளை ஜெயிக்கிற பக்கம் சாய்ந்து விடலாம் என்று இந்த புத்திசாலித்தமான பதிலை சொல்லி வருகிறாரோ ஜெயம்ரவி என்று பேசிக்கொள்கிறார்கள்.