‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
மக்களின் ஜனாதிபதி, ஏவுகணையின் நாயகன், மாணவர்களின் எழுச்சி நாயகன் என பல்வேறு பட்டங்களுக்கு சொந்தக்காரரான டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் மறைவு இந்தியாவையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ரமணா படத்தில், ''ஒரு குடும்பத்தில் ஒருவர் இறந்து, அவனுக்காக அந்த குடும்பமே அழுதால் அவன் ஒரு நல்ல குடும்ப தலைவன்... ஆனால் ஒருவனுக்காக நாடே அழுகிறது என்றால்...'' என்று ஒரு வசனக்காட்சி வரும்... அந்தவசனக்காட்சி ஒரே ஒரு சொந்தக்காரர் என்றால் அப்துல் கலாம் மட்டும் தான். அவரின் மறைவுக்கு நாடே அழுகிறது.
கலாமின் மறைவையொட்டி தமிழகத்தில் நாளை பொதுவிடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக வணிக நிறுவனங்கள் உட்பட பலர் விடுமுறை அளித்துள்ளனர். இதன் ஒருபகுதியாக தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கமும் நாளை இரண்டு நேரம் காட்சிகளை ரத்து செய்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக திரையரங்கு உரிமையாளர் சங்கத்தி்ன் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது... ''அப்துல் கலாம் அவர்களின் மறைவு பேரிழப்பு. நாளை(ஜூலை 30) அவரது உடல் அடக்கம் செய்யப்படுவதையொட்டி திரையரங்குகளில் காலை மற்றும் பகல் காட்சிகளை ரத்து செய்துள்ளோம்'' என்று கூறப்பட்டுள்ளது.