ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் |
டோலிவுட்டில் ரே, பிள்ளை நிவூ லெனி ஜீவிதம் போன்ற படங்களில் நாயகனாக நடித்த நடிகர் சாய் தரன் தேஜ் தற்போது இயக்குநர் ஹரீஷ் சங்கர் இயக்கும் சுப்ரமணியம் பார் சேல் படத்தில் நடிக்கின்றார். எஸ்.வி.சி பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ராஜு தாயரிக்கும் இப்படத்தில் சாய் தரன் தேஜிற்கு ஜோடியாக நடிகை ரெஜினா நடிக்கின்றார். இப்படம் ஆகஸ்ட் 28 ஆம் தேதி திரைக்கு வரும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இப்படத்தின் முன்னோட்ட காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் இப்படம் குறித்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்திற்கு பின்னர் சாய் தரன் டோலிவுட்டில் பட்டாஸ் எனும் வெற்றிப் படம் கொடுத்த இயக்குநர் அணில் ரவிபுடி இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. நடிகர் கல்யாண் ராம் மற்றும் நடிகை ஸ்ருதி சோதி நடிப்பில் வெளிவந்த பட்டாஸ் திரைப்படம் டோலிவுட்டில் சூப்பர் ஹிட் அடித்து. அப்படத்தின் இயக்குநர் அணில் ரவிபுடி கூறிய கதை நடிகர் சாய் தரன் தேஜிற்கு பிடித்துப் போனதால் அதில் நடிக்க சாய் தரன் சம்மதம் தெரிவித்துள்ளாராம்.தயாரிப்பாளர் ராஜு இத்தகவலை உறுதி செய்துள்ளார். விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.