பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு | தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் | நாக சைதன்யா, பூஜா ஹெக்டேவை இயக்கும் விருபாக்ஷா இயக்குனர் | ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' |
அஞ்சலி பற்றி அரசல் புரசலாக சொல்லப்பட்ட விஷயம்தான். அதை மேடையிலேயே போட்டு உடைத்துவிட்டார் சகலகலாவல்லவன் படத்தின் இயக்குநரான சுராஜ்.
பார்ப்பதற்கு சாதுபோல் இருக்கும் அஞ்சலி, நிஜத்தில் பயங்கர கோபக்காரி என்று படத்துறையில் உள்ளவர்கள் சொல்வார்கள். அவர் எந்தளவுக்கு கோபக்காரி என்பதற்கு உதாரணமாக ஒரு சம்பவத்தைச் சொன்னார் சுராஜ். சகலகலாவல்லவன் படத்தின் படப்பிடிப்பு நடந்தபோது, மாலை பேக்கப் சொன்ன பிறகு அனைவரும் அவரவர் ரூமுக்குப்போய்விட்ட பிறகும் அஞ்சலி மட்டும் போக மாட்டாராம். கிரிக்கெட் விளையாடுவது உட்பட பல விளையாட்டுகள் விளையாடுவது அல்லது கேளிக்கை என டைம்பாஸ் செய்வாராம். அதனால் மறுநாள் படப்பிடிப்புக்கு தாமதமாக வருவாராம். இதனால் படப்பிடிப்பு தாமதமானதை அடுத்து அஞ்சலியை சீக்கிரம் போய் தூங்கச்சொல்லி இருக்கிறார் சூரி. அவரது அட்வைஸ் அஞ்சலியை டென்ஷனாக்கிவிட்டதாம். உடனே சூரியின் செல்போனைப் பிடுங்கி கீழேபோட்டு உடைத்திருக்கிறார்.