போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
இயக்குனர் ஏ.எல்.விஜய்யின் சகோதரர் உதயா நடித்துள்ள ஆவிகுமார் படம் நாளை வெளிவருகிறது. படத்தின் தயாரிப்பாளருக்கும், அவருக்கும் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு காரணமாக படத்தின் புரமோசன்களில் அவர் புறக்கணிக்கப்பட்டு வருகிறார். இதுகுறித்து உதயா அளித்த பேட்டி:
15 வருடத்திற்கு முன்பு திருநெல்வேலி படத்தில் அறிமுகமானேன். இதுவரை 15 படங்களில் நடித்திருக்கிறேன். எனது துரதிர்ஷ்டம் நான் நடித்த காதல் ஜாதி, ஆசாமி, கோட்சே, டில்லி, பூங்குயிலே போன்ற படங்கள் வெளிவரவில்லை. ஒரு வேளை இந்த படங்கள் வெளிவந்திருந்தால் எனது நிலை வேறாக இருந்திருக்கலாம்.
ஆவிகுமார் படம் எனக்கு திருப்பம் தரும் படமாக அமையும் என்று நம்புகிறேன். நான் நடித்த படங்களில் அதிக தியேட்டர்களில் வெளியாகும் படம் இது. ஆவி குமாரை, டிடூஎச்சில் வெளியிட தீர்மானித்தோம். தயாரிப்பாளர் படம் நன்றாக வந்திருக்கிறது, தியேட்டரில் வெளியிடலாம் என் நான் கருத்து சொன்னேன். இந்த முரண்பாடு முற்றி ஈகோவாகிவிட்டது. என் மீது கோபம் கொண்டு புரமோசன்களில் என்னை புறக்கணித்தாலும் படத்திற்கு நல்ல முறையில் விளம்பரம் செய்து படத்தை தாங்கி பிடிக்கிறார்கள். அவர்களுக்கு நன்றி. காலம் எல்லா காயத்தையும் ஆற்றிவிடும். தோல்விகளிலிருந்து நானும் மீண்டு வருவேன். என்றார்.