‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
வழக்கமாக தெளுங்குபடங்கள் கேரளாவில் ரிலீஸ் ஆகும்போது மலையாளத்தில் டப்பிங் செய்யப்பட்டு தான் ரிலீஸாவது வழக்கம். ஆனால் நாளை ரிலீஸாகும் 'பாகுபலி' படம் தமிழ், தெலுங்கு என இருமொழிப்படமாக உருவாகியுள்ளதால் பெரும்பாலான தியேட்டர்களில் இந்தமுறை தமிழிலேயே திரையிடுகிறார்கள். மலையாள ரசிகர்களுக்கும் மலையாள டப்பிங்கில் பார்ப்பதைவிட தமிழில் பார்ப்பதில் தான் விருப்பம் அதிகம் என்கிறார் இந்தப்படத்தை கேரளாவில் திரையிடும் குளோபல் யுனைடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரான பிரேம் குமார்.
அதுமட்டுமல்ல கேரளாவில் முதன்முறையாக 4K புரஜக்சன் முறையில் திரையிடப்படும் படமும் 'பாகுபலி' தான். இதற்கு முன்னர் கடந்த மே மாதம் வெளியான 'பிரேமம்' படம் 5K முறையில் எடுக்கப்பட்டிருந்தாலும் கூட, அந்த வடிவில் திரையிடுவதற்கான தியேட்டர்கள் இல்லையென்பதால் 2Kவுக்கு மாற்றப்பட்டு திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்ல திருவனந்தபுரத்தில் உள்ள ஏரிபிலக்ஸ் தியேட்டர்களில் மட்டும் 64 சேனல் டால்பி அட்மாஸ் சவுன்ட் சிஸ்டத்தில் 'பாகுபலி' ரிலீசாவதும் இன்னொரு சிறப்பு.. ஆக மலையாள ரசிகர்களுக்கு 'பாகுபலி' புதிய அனுபவத்தை தரும் என்பதில் சந்தேகமில்லை.