பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு | தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் | நாக சைதன்யா, பூஜா ஹெக்டேவை இயக்கும் விருபாக்ஷா இயக்குனர் | ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' |
மலையாள சினிமாவையே கடந்த பாத்து நாட்களுக்கும் மேலாக கதிகலக்கிய 'பிரேமம்' பட பைரஸி விவகாரத்தில் குற்றவாளிகள் ஆன்டி பைரஸி செல்லிடம் சிக்கினர்.. இவர்களில் மூன்று பேர் பிளஸ் ஒன், பிளஸ் டூ மாணவர்கள் என்பதுதான் அதிர்ச்சியான விஷயம்.. பிரேமம் படத்தின் சென்சார் காப்பி, வெளிநாட்டில் இருக்கும் திருட்டு விசிடி மாபியா மூலமாக இவர்களுக்கு கிடைத்ததாக தெரியவந்துள்ளது.. அதனால் இந்த குற்றவாளிகளிடம் இதன் பின்னணியில் இன்னும் யார் இருக்கிறார்கள் என்கிற விசாரணை நடைபெற்று வருகிறது.
பிரேமம் படம் கடந்த மே-29ஆம் தேதி ரிலீஸ் ஆனது.. ஆனால் ஆன்லைனில் பதிவேற்றப்பட்டது ஜூன்-22ல்.. இதில் அதிர்ச்சி என்னவென்றால் படத்தை ரிலீஸ் செய்வதற்கு முன்பாக சென்சாருக்கு திரையிட்டு காட்டுவதற்காக அனுப்பப்படும் வாட்டர் மார்க் கொண்ட பிரதி தான் ஆன்லைனில் திருட்டுத்தனமாக பதிவேற்றப்பட்டுள்ளது. சென்சாருக்கு அனுப்பப்பட்ட பிரதி, திருட்டு டிவிடி மாபியாக்கள் கைக்கு எப்படி சென்றது..?
பிரேமம் படத்தை பார்த்து தணிக்கை சான்றிதழ் வழங்குவதற்காக, அந்தப்படத்தின் போஸ்ட் புரடக்சன் பணிகள் நடைபெற்ற திருவனந்தபுரம் ஸ்டுடியோ ஒன்றில் இருந்து ஒரு பிரதி, வாட்டர் மார்க்குடன் சென்சார் அதிகாரிகளுக்கு மே-18ல் திரையிடப்பட்டது. படத்தை பார்த்த அதிகாரிகள் புகைபிடிப்பது சம்பந்தமான வாட்டர் மார்க்குகளில் எழுத்துக்களின் அளவு சிறியதாக இருந்ததால் அதை கொஞ்சம் பெரிதாக ஆக்குமாறு கூறியுள்ளனர்.