‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
விஜய் ஆண்டனி நடித்த நான் படத்தில் மக்காஏல மக்கா ஏல -என்ற ஹிட் பாடலை எழுதிய ப்ரியன், அதற்கடுத்து அதே விஜய்ஆண்டனி இசையமைத்த நடித்த சலீம் படத்திலும் மஸ்காரா போட்டு மயக்குறியே என்ற பாடலை எழுதினார். இந்த இரண்டு குத்துப்பாடல்களுமே அவருக்கு சூப்பர் ஹிட்டாக அமைந்தன. அவரிடத்தில் மெலோடியை விட குத்துப்பாடல்கள் எழுதுவதில்தான் நீங்கள் ஸ்பெசலிஸ்டா? என்று கேட்டால், அப்படி எதுவும் இல்லை. எல்லாவிதமான சூழலுக்கும் நான் பாடல்கள் எழுதியிருக்கிறேன்.
கோலிசோடா படத்தில் நான் எழுதிய ஜனனம் ஜனனம் -என்ற பாடல் மிகப்பெரிய ஹிட்டானது. இதேபோல் பல மெலோடி பாடல்களை பல படங்களில் எழுதியிருக்கிறேன். இப்போது விஜய் ஆண்டனி நடித்து வரும் பிச்சைக்காரன் படத்தில் சில அற்புதமான மெலோடி டியூனுக்கு பாடல் எழுதியிருக்கிறேன். மேலும், என்னைப்பொறுத்தவரை என்னை அதிகம் பாதித்த கவிஞரான வாலியைப் போன்று எல்லாவிதமான சூழலுக்கும் பாடல் எழுத வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். எனது எதிர்கால திரையிசைப்பாடல்களின் பயணம் வாலியை பின்பற்றியே இருக்கும் என்கிறார் பாடலாசிரியர் ப்ரியன்.