ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் |
நாடோடிகள் படத்தின் மூலம் அறிமுகமானவர் அனன்யா, எங்கேயும் எப்போதும் உள்பட பல படங்களில் நடித்து வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கும்போது திடீரென்னு தன் தந்தை வயதுள்ள ஆஞ்சநேயலு என்ற தொழில் அதிபரை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு அருக்கு வாய்ப்புகள் குறைந்து விட்டது.
இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: தமிழ் படங்களில் வாய்ப்புகள் குறைந்திருப்பது உண்மைதான். அதற்கு காரணம் நான் யாரையும் தேடிச் சென்று வாய்ப்பு கேட்பதில்லை. மானேஜர்கள் வைத்து வாய்ப்பு தேடுவதும் இல்லை. அனன்யா நடித்தால் நன்றாக இருக்கும் என்று என்னை தேடிவருகிற கேரக்டர்களில் மட்டும் நடிக்கிறேன். என் கணவர் சினிமாவில் நடிக்க எந்த தடையும் சொல்லவில்லை. அவர் சொன்னது யாரையும் தேடிச் சென்று வாய்ப்பு கேட்காதே என்பதுதான். அதை நான் கடைபிடிக்கிறேன். அனன்யா குறிப்பிட்ட சில கேரக்டருக்குதான் பொருத்தமாக இருப்பார் என்று தமிழ் இயக்குனர்கள் முடிவு செய்திருக்கலாம். என்னால் மார்டன் கேரக்டரிலும் நடிக்க முடியும். அதற்கான வாய்ப்பு வந்தால்தானே செய்து காட்ட முடியும்.