போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
பில்லா, ஆரம்பம் படங்களின் இயக்குநராக விஷ்ணுவர்தனின் தம்பி என்ற விசிட்டிங்கார்டை வைத்துக் கொண்டு நடிகரானவர் கிருஷ்ணா. அலிபாபா, கழுகு, என பல படங்களில் நடித்தும் பிரபலமாகாமலே இருந்த கிருஷ்ணா விஜய்சேதுபதி உடன் இணைந்து வன்மம் என்ற படத்தில் நடித்தார். அந்தப்படத்தில் நடித்த பிறகுதான் நாலு பேருக்கு தெரிகிற அளவுக்கு வளர்ந்தார்.
இந்நிலையில், தன் மனைவியை செய்வதாக அறிவித்திருக்கிறார் கிருஷ்ணா. கடந்த வருடம் தான் ஹேமலதா என்ற பெண்ணை காதலித்து மணந்தார். அதற்குள் விவாகரத்து. என்ன காரணம்?
கிருஷ்ணா ஹேமலாதா விவாகரத்துக்கு நடிகை சுனைனாதான் காரணம் என்று கோலிவுட்டில் பரவலாக செய்தி வெளியாகியுள்ளது. வன்மம் படத்தில் சுனைனா உடன் சேர்ந்து நடித்தார் கிருஷ்ணா. அந்தப் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போது சுனைனா மீது காதல் வயப்பட்டிருக்கிறார் கிருஷ்ணா. அதன் பிறகுதான் மனைவியுடன் பிரச்சனை ஏற்பட்டது என்று தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே இதுதொடர்பாக நடிகை சுனைனாவிடம் தொடர்பு கொள்ள முற்பட்டபோது அவர், போனை அட்டண்ட் பண்ணவில்லை. அதேசமயம் அவரது அம்மாவிடம் தொடர்பு கொண்டு இதுப்பற்றி கேட்டோம்... அவர் கூறுகையில், வன்மம் படத்தை முடித்தவுடன் நாங்கள் சுத்தமாக சென்னையில் இல்லை, பெங்களூருக்கு வந்துவிட்டோம். கிருஷ்ணாவுக்கும், எங்களுக்கும் அதன்பின்னர் எந்த ஒரு தொடர்பும் கிடையாது. கிருஷ்ணா குடும்ப பிரச்னையில், தேவையில்லாமல் என் மகளை தொடர்புபடுத்துவது நியாயம் அல்ல என்று கூறியுள்ளார்.