போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
சுசீந்திரன் இயக்கத்தில் பாண்டியநாடு படத்தில் வைரமுத்து, டி.இமான் கூட்டணியில் பாடல்கள் வெற்றி பெற்றன. அதனால் அதே கூட்டணி விஷால் நடிக்கும் பாயும்புலி படத்திலும் தொடர்கிறது. படத்தில் ஐந்து பாடல்கள் உள்ளன. மதுரைப் பின்னணியில் நடக்கும் கதை என்பதால் மதுரைக்காரர் வைரமுத்துக்கு எழுத சொல்ல வேண்டுமா என்ன? ஐந்து பாடல்களும் விதவிதமாக வெவ்வேறு கருத்துகளை சொல்லும்படி உள்ளனவாம். அதில் ஒரு பாடல் வருகிறது. மருத மருதக்காரி வெள்ளயன எதுத்தா.. புலிய புலியக் கூட மொறத்தால அடிச்சா என்கிற அந்தப் பாடலுக்கு மரக்காணம் அருகே ஒரு பிரமாண்ட செட் போட்டுப் படமாக்கியுள்ளனர். விஷால் காஜல் நடித்துள்ளனர். இன்னொரு பாடலைப் பின்னி மில்லில் செட் போட்டு எடுத்துள்ளனர். இதில் குத்துப் பாட்டு ஆடும் குத்து விளக்குகளின் உரிமைகள் பற்றி எழுதியுள்ளாராம் வைரமுத்து. குத்துப்பாடல் ஆடும் பாத்திரங்களை குறைவாக மதிப்பிட வேண்டாம் என்று சொல்கிறதாம் அந்தப் பாடல்.