‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
பிரச்சனை என வந்தால் தீர்த்து வைக்கத்தான் சங்கம் இருக்கு. ஆனால் அவர்கள் அதற்கான முயற்சியையே எடுக்காவிட்டால் அப்புறம் சங்கத்தில் இருந்து என்ன பிரயோஜனம் என கடும் வருத்ததுடன் தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து தான் விலகுவதாக அறிவித்துள்ளார் இயக்குனரும் தயாரிப்பாளருமான அன்வர் ரஷீத். சமீபத்தில் இவர் தயாரிப்பில் அல்போன்ஸ் புத்தரன் இயக்கத்தில் நிவின்பாலி நடிப்பில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் 'பிரேமம்' படத்தின் திருட்டு விசிடி விற்பனை மற்றும் ஆன்லைனில் படம் திருட்டுத்தனமாக வெளியானது இவை குறித்து தயாரிப்பாளர் சங்கம் எந்த ஒரு தீர்வையும் தனக்கு வழங்கவில்லை என தனது விலகலுக்கு காரணமாக குற்றம் சாட்டியுள்ளார் அன்வர் ரஷீத்.
குறிப்பாக ஆன்லைனில் பதிவேற்றப்பட்ட படத்தின் காப்பி சென்சார் செய்யப்பட காபி என்றும், அது கனடாவில் இருந்து பதிவேற்றப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ள அன்வர் ரஷீத், சென்னை மற்றும் திருவனந்தபுரம் இரண்டு இடங்களில், இந்தப்படத்தின் போஸ்ட் புரடக்சன் நடைபெற்ற முக்கிய ஸ்டுடியோக்களில் ஏன் சோதனையும் விசாரணையும் நடத்த தயங்குகின்றனர் என்பது குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளார்.