போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
சந்தானம் நடித்த கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் விசாகா சிங். தொடர்ந்து விமல், சூரி நடித்த ஒரு ஊர்ல ரெண்டு ராஜா' படத்தில் நடித்தார். அந்தப்படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை. ஓடாத படத்தில் நடித்தவர் என்ற ஒரே காரணத்துக்காக விசாகாசிங்கை ஓரங்கட்டியது கோலிவுட்.
தமிழில் படம் இல்லை என்றதும் தெலுங்கில் கவனம் செலுத்த ஆரம்பித்த விசாகாசிங்கை தேடிப்பிடித்து தன் படத்தில் நடிக்க வாய்ப்புக் கொடுத்திருக்கிறார் புதுமுக இயக்குநர் ஒருவர். 'ஈரம்' படத்தை இயக்கிய அறிவழகனிடம் அசோஸியேட் இயக்குனராக பணிபுரிந்த மணிஷர்மாதான் அவர். கமர்ஷியல் விஷயங்களுடன் முழுக்க முழுக்க ஹாரர் படமாக உருவாகும் இப்படத்தில் விசாகா சிங் மாறுபட்ட ஒரு கேரக்டரில் நடிக்கிறாராம். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் மூணார் பகுதிகளில் நடைபெறவிருக்கிறது.