போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
தமிழ்நாடு இயக்குனர்கள் சங்கத்திற்கு வருகிற 5ந் தேதி தேர்தல் நடக்கிறது. இதில் தற்போது தலைவராக இருக்கும் விக்ரமன், செயலாளர் ஆர்.கே.செல்வமணி, பொருளாளர் வி.சேகர், துணை தலைவர்கள் கே.எஸ்.ரவிகுமார், பி.வாசு ஆகியோர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டார்கள்.
12 செயற்குழு உறுப்பினர் பதவிக்கு 25 பேர் போட்டியிட்டனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் துணை இயக்குனர்கள். அவர்களில் 6 பேருக்கு செயற்குழு உறுப்பினர் பதவி தருவாதாக பேசப்பட்டதையொட்டி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட தலைமைய ஏற்றுக் கொண்டு மற்றவர்கள் போட்டியிலிருந்து விலகிக் கொண்டார்கள். இதனால் செயற்குழு உறுப்பினர்கள் 12 பேரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டனர்.
இணைச் செயலளர் பதவி மட்டும் இழுபறியில் உள்ளது. 4 இணை செயலாளர் பதவிக்கு லிங்குசாமி, சுந்தர்.சி, பேரரசு, ஏகாம்பவாணன், ஜாக்கிராஜ் என 5 பேர் போட்டியிடுகிறார்கள். இதில் ஏகாம்பவாணனும், ஜாக்கிராஜூம் துணை இயக்குனர்கள். ஐந்துபேரில் ஒருவர் வாபஸ் பெற்றால் இணை செயலாளர்களும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதற்கான பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. பேச்சு வார்த்தை தோல்வியில் முடியும்பட்சத்தில் இணை செயலாளர் பதவிக்கு மட்டும் தேர்தல் நடக்கலாம் என்று தெரிகிறது.