‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
நடிகர் எஸ்.வி.சேகர் திரைப்பட தணிக்கை குழு உறுப்பினராக உள்ளார். தணிக்கை குழுவின் விதிமுறைகள் முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் உள்ளது. அதனை தமிழில் மொழிபெயர்த்து புத்தகமாக வெளியிடுகிறார் எஸ்.வி.சேகர். இதுபற்றி அவர் கூறியதாவது:
திரைப்படம் இயக்குபவர்கள், தயாரிப்பாளர்கள் பெரும்பாலானவர்களுக்கு தணிக்கை குழு விதிமுறைகள் தெரியவில்லை. அதனால் அவர்களை அறியாமலேயே தணிக்கை குழு ஆட்சேபம் தெரிவிக்கும் காட்சிகளை எடுத்து வந்து விடுகிறார்கள். பின்பு அதனை நீக்குகிறார்கள். இதனால் அவர்களுக்கு பணம், நேரம், உழைப்பு அனைத்தும் வீணாகிறது. தணிக்கை குழு விதிமுறைகள் முழுமையாக தெரிந்திருந்தால் அந்த காட்சிகளை அவர்களே தவிர்த்துவிடுவார்கள்.
தணிக்கை குழுவின் விதிமுறைகள் ஆங்கிலத்தில் படிக்கமுடியாத அளவிற்கு சிறிய எழுத்துக்களில் உள்ளது. அதனை நான் தற்போது தமிழில் மொழிபெயர்த்து புத்தகமாக வெளியிட இருக்கிறேன். தற்போது புத்தகம் தயாராகி வருகிறது. சுமார் 250 பக்கங்கள் கொண்ட புத்தகம் சுமார் 150 ரூபாய் விலை வரும். படம் தயாரிக்க வருகிறவர்கள், இயக்குகிறவர்கள் இந்த புத்தகத்தை படித்து தெரிந்து கொண்டு படம் எடுத்தால் தணிக்கை குழு பிரச்சினைகளில் சிக்காமல் இலகுவாக படத்தை வெளியிடலாம். என்றார்.