தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் | நாக சைதன்யா, பூஜா ஹெக்டேவை இயக்கும் விருபாக்ஷா இயக்குனர் | ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' | தெலுங்கிற்கே முன்னுரிமை தரும் 'குபேரா' குழு | ஒரு அப்டேட் கூட வரவில்லை, வருத்தத்தில் அஜித் ரசிகர்கள் | இளம் இசையமைப்பாளர் பிரவீண் குமார் மரணம் | ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை | ‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் |
வடிவேலு-சுந்தர்.சி நட்பில் விரிசல் விழுந்தபோது அந்த கேப்பில் சுந்தர்.சியின் பாசறைக்குள் ஐக்கியமாக்கிக்கொண்டவர் சந்தானம். அதோடு, மற்ற படங்களில் நடிக்க சம்பளத்துக்கு முதலிடம் கொடுத்தவர், சுந்தர்.சி படத்தில் தனக்கு திருப்திகரமான காமெடி காட்சிகள் இருக்கும் என்பதால் கொடுக்கிற சம்பளத்தை வாங்கிக்கொண்டு நடித்தார் சந்தானம். அதனால், சில மேடைகளில் சந்தானம் மாதிரி ஒரு காமெடியனை பார்த்ததேயில்லை என்று புகழ்ந்து தள்ளி வந்தார் சுந்தர்.சி, ரெண்டு, கலகலப்பு, தீயா வேலை செய்யணும் குமாரு, அரண்மனை ஆகிய படங்களில் அவர்களின் கூட்டணி தொடர்ந்தது. ஆனால் அதன்பிறகு திடீரென்று சந்தானம் ஹீரோவாகி விட்டார்.
ஆனபோதும், காமெடிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் டைரக்டர்கள், எனக்கு முக்கியத்துவம் தரும் ஹீரோக்களின் படங்களில் நடித்துக்கொண்டே ஹீரோவாக நடிப்பேன் என்று சந்தானம் ஓப்பன் ஸ்டேட்மென்ட் கொடுத்தார். ஆனபோதும் தனது புதிய படத்திற்கு சூரியை ஒப்பந்தம் செய்துவிட்டார் சுந்தர்.சி., இதனால் காமெடிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சுந்தர்.சி போன்ற டைரக்டர்கள் தன்னை ஒருபோதும் கைவிடமாட்டார்கள் என்று நம்பிக்கொண்டிருந்த சந்தானம் மனதளவில் ஏமாற்றம் அடைந்திருக்கிறாராம். அதோடு, தற்போது தனக்கு ஆதரவு கொடுத்து வரும் ஆர்யா, உதயநிதி போன்றோர்களும் எதிர்காலத்தில் தன்னை கழட்டிவிட்டு விடுவார்களோ என்கிற அச்சமும் சந்தானத்துக்கு மனதளவில் ஏற்பட்டுள்ளதாம். அதனால் தனது ஹீரோ மார்க்கெட்டை ஸ்டெடியாக்கிக்கொள்ள தீவிரமடைந்திருக்கிறார் அவர்.