‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
மலையாள திரைப்படங்களை பொறுத்தவரை காமெடி நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடுவை திரையில் காட்டினாலே ரசிகர்களின் விசிலும் கைதட்டலும் பறக்கும். காரணம் அவரது காமெடியும் டயலாக் டெலிவரியும் வித்தியாசமானது. 2005ல் 'ராஜமாணிக்கம்' படத்தில் மம்முட்டிக்கு திருவனந்தபுரம் பாஷையை சொல்லிக்கொடுப்பதற்காக மலையாள சினிமாவில் கால்பதித்தவர் சுராஜ் வெஞ்சாரமூடு. மலையாள சினிமா சம்பந்தப்பட்ட எந்த விழாவானாலும் அதில் மம்முட்டி, மோகன்லால், சுரேஷ்கோபி என அனைவரையும் அவர்களைப்போலவே அவர்கள் முன்னிலையிலேயே மிமிக்ரி செய்து காண்பிக்கும் தைரியமான திறமைசாலி ஒருத்தர் இருக்கிறார் என்றால் அது இவர்தான்.
அவ்வளவு ஏன் ஒரு படத்தில் மம்முட்டியையே, மம்முட்டி போல நடிக்கச்சொல்லி ட்ரில் வாங்குவார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.. நகைசுவை நடிகர்தானே என என்று மட்டும் தப்புக்கணக்கு போட்டுவிடாதீர்கள்.. 2013ஆம் வருடத்தின் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றவர் இவர்தான். அதிரடி நகைச்சுவை நடிகரான சுராஜ் இந்த விருதை பெற்றிருப்பது 'பேரறியாதவர்' என்கிற படத்தில் குணச்சித்திர வேடத்தில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காகத்தான். தொடர்ந்து காமெடி, குணச்சித்திரம் என இரட்டைக்குதிரைகளில் பவனிவரும் சுராஜ் இன்று தனது 39வது பிறந்தநாளில் அடியெடுத்து வைக்கிறார் என்பது குறிப்ப்பிடத்தக்கது..