போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
அட்டகத்தி, பீட்சா, சூதுகவ்வும், தெகிடி, முண்டாசுப்பட்டி, சரபம், எனக்குள் ஒருவன் போன்ற வித்தியாசமான படங்களை தயாரித்த சி.வி.குமார் தயாரிப்பில், ரவிக்குமா இயக்கத்தில், விஷ்ணு, மியா ஜார்ஜ், கருணாகரன் ஆகியோரது நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் இன்று நேற்று நாளை. டைம் மிஷனை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்த இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
''இன்று நேற்று நாளை'' படம் தொடர்பாக தினமலர் இணையளத்தில் போட்டி ஒன்று நடத்தப்பட்டது. அதில், டைம் மிஷன் உங்கள் கையில் கிடைத்தால் நீங்கள் என்ன செய்வீர்கள் என்று கேட்டிருந்தோம். சிறந்த பதில் தரும் 5 வாசகர்களுக்கு தயாரிப்பாளர் சிவி குமார், பரிசு ஒன்று தருவதாக குறிப்பிட்டிருந்தோம்.
அதன்படி, இந்த போட்டியில் நூற்றுக்கும் மேற்பட்ட வாசகர்கள் பங்கேற்றனர். அவர்கள் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில் ஐந்து பேரை தேர்வு செய்து, அவர்களுக்கு தயாரிப்பாளர் சி.வி.குமார், இயக்குநர் ரவிக்குமார், ஹீரோ விஷ்ணு, ஹீரோயின் மியா ஜார்ஜ், நடிகர் கருணாகரன், இசையமைப்பாளர் ஆதி ஆகியோரது முன்னிலையில் பரிசுகள் வழங்கப்பட்டது.
பரிசுபெற்ற சென்னை, வண்ணாரப்பேட்டையை சேர்ந்த லோகநாதன் பேசும்போது... நான் எப்பவும் தினமலர் இணையதளத்தை தினசரி படிப்பேன், எனது போனிலும் தினமலர் ஆப் உள்ளது. செய்திகள், கிசுகிசுக்கள் உள்ளிட்ட விஷயங்கள் நன்றாக இருக்கும். அப்போது தான் ஒரு போட்டி ஒன்று அவர்கள் நடத்துவதை படித்தேன். வித்தியாசமாக இருந்தது, சரி நாமும் பங்கேற்கலாமே என்று கலந்து கொண்டேன், இப்போது போட்டியில் வெற்றியும் பெற்றுள்ளேன். மேலும் ஹீரோ, ஹீரோயின் தயாரிப்பாளர், இயக்குநர் உள்ளிட்ட படக்குழுவையும் சந்தித்தோம். இப்படியொரு வாய்ப்பு தந்த தினமலருக்கு நன்றி என்றார்.
ஸ்ரீபெரும்புதூரை சேர்ந்த ஜெயலட்சுமி பேசும்போது... கடைசிநாளில் தான் தினமலர் இணையதளத்தில் பார்த்து போட்டியில் பங்கேற்றன், இப்போது பரிசும் கிடைத்தது, நன்றி என்றார்
சென்னையை சேர்ந்த பார்த்தசாரதி பேசும்போது... நான் இப்போது தான் முதன்முறையாக ஆன்-லைன் போட்டியில் பங்கேற்றன், முதல் தடவையே எனக்கு பரிசு கிடத்தது சந்தோஷசம், விஷ்ணு, மியா ஆகியோரையும் பார்க்க ஒரு வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி என்றார்.
திருவெற்றியூரை சேர்ந்த நவீன் பேசுகையில்... வெப்சைட்டில் தான் இந்த போட்டியை பார்த்தேன். சுனாமியை பற்றி எழுதியிருந்தேன், எனக்கு பரிசும் கிடைத்தது, ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது என்றார்.