போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
'பாகுபலி' படத்தின் தமிழ்ப் பதிப்பிற்கான இசை இன்று வெளியாகிறது. ஜுலை 10ம் தேதி படத்தை வெளியிடுவதற்கான அனைத்து முயற்சிகளும் பரபரப்பாக நடந்து வருகின்றன. அதே சமயத்தில் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்திற்கான மொத்த செலவு சுமார் 300 கோடியைத் தொட வாய்ப்புள்ளதாக டோலிவுட் வட்டாரங்களில் பேசிக் கொள்கிறார்கள். ஒவ்வொரு காட்சியையும் மிகவும் தரமாகவும், எந்தக் குறையும் இல்லாமல் மிகவும் நேர்த்தியாகவும் உருவாக்க வேண்டும் என்ற காரணத்தால் படத்தின் பட்ஜெட் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக் கொண்டே வந்துவிட்டதாம். இந்தப் படத்தின் விஷுவல் எஃபெக்ட்ஸ் வேலைக்காக மட்டும் பல நூறு கலைஞர்கள் பல மாதங்களாக உழைத்து வருகிறார்கள். முதல் பாகத்தை முடிப்பதற்குள்ளாகவே எதிர்பார்த்த பட்ஜெட்டை விடவும் சில மடங்குகள் செலவு அதிகரித்துவிட்டதாம். அதனால், இரண்டாம் பாகத்தை முடிப்பதற்காக திட்டமிட்டுள்ள பட்ஜெட் மேலும் அதிகமாகும் சூழ்நிலை உருவாகியுள்ளதாம்.
இப்போதைக்கு அவ்வளவு பணத்தை இரண்டாம் பாகத்தின் பணிகளுக்காக செலவிட முடியாத நிலையில் தயாரிப்பு நிறுவனம் இருக்கிறதாம். முதல் பாகத்தை வெளியிட்டு முடித்த பின் அதன் மூலம் கிடைக்கும் வருவாயை வைத்து இரண்டாம் பாகத்தின் பணிகளைத் தொடராம் என முடிவு எடுத்திருக்கிறார்களாம். அதனால், இரண்டாம் பாகத்தின் விஷுவல் எஃபெக்ட்ஸ் வேலைகள், மற்ற இறுதிக் கட்டப் பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளார்களாம். முதல் பாகத்திற்கான மொத்த வரவு - செலவு கணக்கு முடிந்த பின்னர் அதற்கேற்ற விதத்தில் இரண்டாம் பாகத்திற்கு செலவு செய்யலாம் என திட்டமிட்டுள்ளார்கள் என்கிறார்கள்.