இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் | ரஜினியுடன் இணைந்து நடனமாடும் அனிரூத்? |
நாசர் சினிமாவில் குப்பை பொறுக்குபவராக இதுவரை நடித்ததில்லை. ஆனால் நிஜ வாழ்க்கையில் குப்பை பொறுக்கிக் கொண்டிருக்கிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
நானும் ஒளிப்பதிவாளர் சண்முகசுந்தரமும் நெருங்கிய நண்பர்கள். சண்முகசுந்தரம் நல்ல ஓவியர். அதோடு அவருக்கு ஒரு பழக்கம் இருந்தது. அவர் குப்பையில் வீசப்பட்ட பொருள்களை பொறுக்கி எடுத்து வந்து அதில் விதவிதமான கலைப் பொருட்கள் செய்வார். அவருடன் பழகிய பிறகு எனக்கும் அந்த பழக்கம் தொற்றிக் கொண்டது. அது ஒரு போதை மாதிரி மனதுக்குள் வந்து விட்டது.
படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் நானும், சண்முகவேலும் மோட்டர் சைக்கிளை எடுத்துக் கொண்டு, முகத்தில் கர்சிப்பை கட்டிக்கொண்டு வடபழனி, சாலிகிராமம், தொடங்கி கோயம்பேடு வரைக்கும் உள்ள குப்பை தொட்டிகளை கிளறி தேடுவோம். அதில் வித்தியாசமான பொருள் ஏதாவது கிடைத்தால் அதைக் கொண்டு வந்து கலைப் பொருட்கள் செய்வோம். அதுபோல நிறைய செய்து வைத்திருக்கிறோம். சென்னை ஏரியாவில் பைஜாமா, குர்தா போட்டு, முகத்தில் கர்சிப்கட்டி ஒருவன் குப்பையை கிளறிக்கொண்டிருந்தால் அது நான்தான் என்கிறார் நாசர்.