போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
கார்த்தி நடிப்பில் முத்தையா இயக்கிய கொம்பன் படம் விரைவில் 100 ஆவது நாளை எட்டவிருக்கிறது. இந்நிலையில், "கொம்பன் " படத்தின் கதை எனது கதை என்று துணை இயக்குனர் துரை என்பவர், எழுத்தாளர் சங்கத்திலும், தமிழ்த்திரைப்பட இயக்குனர் சங்கதிலும் புகார் செய்துள்ளார். அவரது புகாரை ஆராய்ந்து அதில் உண்மை இருப்பதை உணர்ந்த தமிழ்த்திரைப்பட இயக்குனர்கள் சங்கம் கொம்பன் படத்திள் தயாரிப்பாளர்களிடம் விளக்கம் கேட்டுள்ளது.
வல்லரசு படத்தை இயக்கிய N.மகாராஜனிடம், தமிழ், இந்தி திரைப்படங்களுக்கு இணை கதாசிரியராக பணிபுரிந்தவர் துரை. தவிர பேரரசு , அம்மு ரமேஷ் போன்ற இயக்குனர்களிடமும், சுமார் 15 ஆண்டு காலம் உதவி மற்றும் துணை இயக்குனராக திரைதுறையில் பல்வேறு இயக்குனர்களிடம் பணிபுரிந்துள்ளார்.
கொம்பன் கதையை 01-02-2012 அன்றே திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்துள்ளார் துரை. 2014-ல் சூப்பர் குட் பிலிம்ஸ் R.B.சொளத்ரி அவர்களிடம் இந்த கதையை கூறியுள்ளார். அவர் நடிகர் விஷாலிடம் பேசி படத்தை தயாரிக்கும் முடிவில் இருந்திருக்கிறார். அதற்கு முன்பு Studio Green நிறுவனத்திற்கு நடிகர் கார்த்தி நடிக்க அணுகியபோது. (Full bound script ) கதை, திரைகதை,வசனம் முழுவதும் கொடுதுள்ளார். அதற்கான அனைத்து ஆதாரங்களும் துரையிடம் உள்ளதாம்.
இது தொடர்பாக கொம்பன் படத்தின் தயாரிப்பாளர்களின் ஒருவரான எஸ்.ஆர்.பிரபு, துரைக்கு அனுப்பிய ஈமெயில் ஆதாரத்தையும் இயக்குநர்கள் சங்கத்தில் சமர்ப்பித்துள்ளார் துரை.