போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சதா. ஜெயம், வர்ணஜாலம், அந்நியன், உன்னாலே உன்னாலே போன்ற படங்களில் நடித்துள்ள சதா த்ரிஷா, நயன்தாரா போன்ற நடிகைகளுக்கு இணையாக வலம் வந்தவர் திடீரென்று மாயமானார்.
தமிழில் போதிய படவாய்ப்புகள் அமையாததால் தெலுங்கு, கன்னடம் போன்ற படங்களில் நடிக்க ஆரம்பித்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு “புலிவேஷம்” படம் மூலம் மீண்டும் தமிழில் ரீஎண்ட்ரியாகியுள்ளார்.
தமிழில் மீண்டும் நடிப்பது குறித்து சதா கூறுகையில், "இந்தி, தெலுங்கு படங்களில் பிசியாக இருந்ததால் தமிழ் படங்களில் நடிக்கவில்லை. நல்ல கதைகள் வந்தால் தமிழில் நடிக்கலாம் என்று தான் இருந்தேன். நிறைய இயக்குநர்கள் என்னை அணுகி கால்ஷீட் கேட்டனர். ஆனால் அவர்கள் சொன்ன கதைகள் எனக்கு பிடிக்க வில்லை. பிறகு டைரக்டர் பி. வாசு அவர்கள் சொன்ன “புலிவேஷம்” கதை ரொம்ப பிடித்து போனது. என்னுடைய கேரக்டருக்கு முக்கியத்துவம் கொடுப்பது போல் இந்த கதை அமைந்ததால் நடிக்க ஒப்புக் கொண்டேன்" என்கிறார்.