போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
கமல் நடித்து, இயக்கி, தயாரித்த பிரமாண்ட படம் ''விஸ்வரூபம்''. பயங்கரவாதத்தை மையமாக வைத்து வௌியான இப்படம் வௌிவருவதற்கு முன்பு பல பிரச்னைகளை சந்தித்தது. குறிப்பாக இப்படத்திற்கு ஏற்பட்ட இடையூறால் கமல், நான் இந்த நாட்டைவிட்டே வௌியேறுகிறேன் என்று சொல்லும் அளவுக்கு தள்ளப்பட்டார். பின்னர் ஒருவழியாக பிரச்னைகள் எல்லாம் தீர்ந்து விஸ்வரூபம் படம் வௌிவந்தது. படமும் வசூலை குவித்தது.
இந்நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகமும் வௌிவர இருக்கிறது. முதல்பாகத்தை எடுக்கும்போதே கிட்டத்தட்ட இரண்டாம் பாகத்தையும் எடுத்துவிட்டார் கமல். விஸ்வரூபம்-2 படத்தை கமல்ஹாசனிடமிருந்து, ஆஸ்கர் ரவிச்சந்திரன் பெற்று தனது பேனரில் தயாரித்தார். இந்தசூழலில், தற்போது பெரும் கடன் பிரச்னையில் சிக்கியிருக்கிறார் ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன். சமீபத்தில் அவரது சொத்துக்களை வங்கி முடக்கியது. இப்படிப்பட்ட நிலையில் விஸ்வரூபம்-2 படம் வௌியாகுமா என்பது கேள்விக்குறியாகி இருக்கிறது. இதனால் கமல்ஹாசன், ஆஸ்கர் ரவிச்சந்திரனிடமிருந்து படத்தை பெற்று அவரே ரிலீஸ் செய்ய போவதாக தற்போது தகவல்கள் வௌியாகியுள்ளன. விரைவில் இதுப்பற்றிய முறையான அறிவிப்பு வௌியாகும் என தெரிகிறது.