ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் |
துல்கர்சல்மான்- நித்யாமேனனை வைத்து ஓ காதல் கண்மணி என்ற படத்தை இயக்கிய மணிரத்னம், அடுத்தபடியாக நாகார்ஜூனா, மகேஷ்பாபு, ஐஸ்வர்யாராயை வைத்து தமிழ், தெலுங்கில் ஒரு மெகா படம் இயக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். இந்த கூட்டணியை வைத்துதான் ஓ காதல் கண்மணியே படத்திற்கு முன்பு ஒரு படம் இயக்கும் முயற்சியில் இறங்கியிருந்தார் மணிரத்னம். ஆனால், மகேஷ்பாபுவின் கால்சீட் அப்போது கிடைக்காததால் அந்த முயற்சியை தள்ளி வைத்து விட்டு, துல்கர்சல்மானை வைத்து ஓ காதல் கண்மணி படத்தை இயக்கினார்.
மேலும், ஓ காதல் கண்மணியே குறுகிய கால படம் என்பதால், வேகவேகமாக அப்படத்தின் படப்பிடிப்பை முடித்தார் மணிரத்னம். அதோடு, சமீபகாலமாக அவர் படப்பிடிப்பு தளத்தில் அதிக வேகத்துடன் காணப்படுவதாகவும் அவருடன் ஒர்க் பண்ணிய கலைஞர்கள் சொல்கிறார்கள்.
அதாவது, முன்பெல்லாம் பெரும்பாலும் உட்கார்ந்த இடத்தில் இருந்தே நடிகர் நடிகைகளிடம் வேலை வாங்கி வந்த மணிரத்னம், இப்போது கடல் படத்திற்கு பிறகு அடியோடு மாறி விட்டாராம். அதாவது படப்பிடிப்பு தளத்தில் ஆப் பேண்ட்- டீசர்ட் போட்டுக்கொண்டு சின்ன பையனாட்டம் ஒவ்வொரு வேலைகளையும் ஓடி ஓடி செய்கிறாராம் மணிரத்னம். அவரது இந்த திடீர் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் உதவி இயக்குனர்களெல்லாம் தடுமாறிக்கொண்டு கிடக்கிறார்களாம்.