‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
ஸ்டுடியோக்ரீன் ஞானவேல்ராஜா தயாரிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் 'மாஸ்' படம் நாளை உலகமெங்கும் வெளியாகிறது. உலகம் முழுக்க சுமார் 1000 தியேட்டர்களில் வெளியாக இருப்பதாக சொல்லப்படுகிறது. தமிழகத்தில் மட்டும் 450 திரையரங்குகளுக்கும் மேல் ரிலீஸாகவிருக்கிறது. மாஸ் படத்தின் முன்பதிவுகள் தொடங்கி தற்போது பரபரப்பாக போய்க் கொண்டிருக்கின்றன. லேட்டஸ்ட் தகவலின்படி தமிழகம் முழுக்க 3 நாட்கள் ஹவுஸ்ஃபுல் என்ற தகவல் அடிபடுகிறது.
இதற்கிடையில் மாஸ் படத்தில் ஹீரோ சூர்யாவின் கேரக்டர் குறித்து வெங்கட் பிரபுட்விட்டரில் புதிய தகவல் ஒன்றை பதிவு செய்திருக்கிறார். அதாவது 'மாஸ்' படத்தில் சூர்யா இரட்டை வேடங்களில் நடிப்பதாகவும், அதில் ஒரு வேடம் ஈழத்தமிழர் என்றும் வெங்கட்பிரபு கூறியிருக்கிறார். அப்பா - மகன் என இரட்டை வேடங்களில் நடிக்கிறார் என்பதை மட்டும் அவர் சொல்லவில்லை. சில தினங்களுக்கு முன் நடைபெற்ற மாஸ் பிரஸ்மீட்டில் சூர்யா இரட்டை வேடங்களில் நடிப்பதைப் பற்றி கேட்டபோது, இந்த செய்தி ரசிகர்களுக்கு கடைசிநேர சர்ப்ரைஸாக இருக்கட்டுமே என்றார் சூர்யா. தற்போது ட்விட்டரில் அந்த சஸ்பென்ஸை உடைத்துவிட்டார் வெங்கட்பிரபு.