‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
நீண்ட இடைவெளிக்கு பிறகு வைகை எக்ஸ்பிரஸ் படத்தில் நடிக்கிறார் கோமல் சர்மா. அடிப்படையில் ஸ்குவாஷ் விளையாட்டு வீராங்கணையான கோமல் சர்மா, அந்த விளையாட்டை விட்டுவிட்டு சினிமாவுக்கு வந்தார். சட்டப்படி குற்றம்தான் கோமல் நடித்த முதல் படம். அதன் பிறகு ஊதாரி படத்தில் நடித்தார். இரண்டு படமும் சரியாக போகாதால் தெலுங்கு பக்கம் போனார். அதன் பிறகு மீண்டும் அமைதிப்படை 2வில் என்ட்ரி கொடுத்தார். அதன் பிறகு இந்திக்குச் சென்றார். இப்போது மீண்டும் வைகை எக்ஸ்பிரஸ் மூலம் தமிழுக்கு வந்திருக்கிறார். ஏன் இந்த இடைவெளி என்பதற்கு கோமல் அளித்த பதில்...
"இது நானாக ஏற்படுத்திக் கொண்டதல்ல அதுவாக அமைந்தது. தமிழில் இரண்டு படங்கள் நடித்த நிலையில் தெலுங்கு வாய்ப்பு வந்தது. அங்கு சென்றதும் பிசியாகிவிட்டேன். அதன் பிறகு இந்தி வாய்ப்பு வந்தது. அதற்காக அங்கு சென்றேன். ஆனால் கடைசி நேரத்தில் அந்தப் படம் கைவிடப்பட்டதால் மீண்டும் தமிழுக்கு வந்திருக்கிறேன். தமிழில் குறைவாக நடித்தாலும் மற்ற மொழிகளில் பிசியாக நடித்து கொண்டிருக்கிறேன்.
தற்போது வைகை எக்ஸ்பிரஸ் எக்ஸ்பிரஸ் படத்தில் பத்திரிகை நிருபராக நடிக்கிறேன். இதற்காக ரெயிலிலேயே பயணம் செய்து நடித்தேன். இந்தப் படம் எனக்கு தமிழில் நல்ல இடத்தை பெற்றுத் தரும் என்று நம்புகிறேன். மீண்டும் ஸ்குவாஷ் விளையாடும் திட்டம் இல்லை. எனது தோழிகள் தீபா பள்ளிங்கல், ஜோஷ்னா ஆகியோர் ஸ்குவாஷில் சாதித்து வருவது மகிழ்ச்சியாக இருக்கிறது" என்கிறார் கோமல் சர்மா.