‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
மெகா ஸ்டார் சிரஞ்சீவி நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனது 150வது படமான ஆட்டோ ஜானியில் நடிக்கிறார். தற்போது அவர் அந்த படத்திற்கு பிறகு திரைப்படங்களில் தொடர்ந்து நடிப்பாரா? என்பது மில்லியன் டாலர் கேள்வியாகும். அவரது ரசிகர்களுக்கு மிகவும் இனிமையான செய்தி காத்து இருக்கின்றது. அவர் 150வது படத்திற்கு பிறகு தொடர்ந்து படத்தில் நடிக்க இருக்கிறாராம். அவர் குடும்பத்தில் இருந்து மெகா இளம் ஹீரோக்கள் இன்று டோலிவுட்டில் சிறந்து விளங்கி கொண்டு இருக்கும் போதும், சிரஞ்சீவிக்கென ஒரு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உண்டு என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது. அவர் தனது ஆட்டோ ஜானிக்காக பூரி ஜெகன்நாத்தை தேர்ந்து எடுத்ததன் மூலம் அவரது ரசிகர்களுக்கு ஒரு கமர்ஷியல் ஹிட் படம் கொடுக்க வேண்டும் அவர் விரும்புவதாக தெரிகிறது.