‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
விஜய் டி.வியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்தவர் சிவகார்த்திகேயன். அந்த சமயத்திலேயே தனது நகைச்சுவையான பேச்சுத்திறமையால் ஏராளமான ரசிகர்களை கவர்ந்திருந்தார். அந்த திறமைக்காகவே அவரை 3 படத்தில் தனது நண்பனாக நடிக்க வைத்தார் தனுஷ். ஆனால் அந்த சமயத்திலேயே மெரினா படத்துக்கு டைரக்டர் பாண்டிராஜ் சிவகார்த்திகேயனை ஹீரோவாக்கினார். இப்படி சினிமாவுக்கு வந்த சிவகார்த்திகேயன், கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான்கராத்தே, காக்கி சட்டை படங்களைத் தொடர்ந்து இப்போது ரஜினிமுருகன் படத்தில் ரஜினியின் ரசிகராகவே நடிக்கிறார். ஆனால் இப்படி படத்துக்காக ரஜினி ரசிகராக நடிக்கும் சிவகார்த்திகேயன் நிஜத்திலும் ரஜினியின் தீவிரமான ரசிகராம். தான் படிக்கிற காலத்தில் ரஜினி படங்கள் தியேட்டருக்கு வரும்போது முதல் நாள் எப்படியேனும் படத்தை பார்த்து விட வேண்டும் என்று தியேட்டர்களில் டிக்கெட்டுக்காக முட்டிமோதியிருக்கிறாராம் சிவகார்த்திகேயன்.
அப்படி கவுண்டர்களில் அவர் போராடி டிக்கெட் வாங்கிவிட்டு வெளியே வந்தால் அவரது சட்டை தொப்பலாக நனைந்திருக்குமாம். அதனால் சட்டையை கழற்றி பிழிந்து விட்டு மீண்டும் அதையே போட்டுக்கொண்டு தியேட்டருக்குள் செல்வாராம். அப்போது ரஜினி முகத்தை திரையில் பார்த்த மறுகணமே அவர் டிக்கெட் எடுக்க பட்ட கஷ்டமெல்லாம் பஞ்சாக பறந்து போய் விடுமாம். படம் முடிகிறவரைக்கும் சீட்டி அடித்துக்கொண்டே படத்தை ரசிப்பாராம்.
அப்படி ரஜினி படங்களை தியேட்டர்களில் பார்த்து அவரது ரசிகராக இருந்த தனக்கு இப்போது ரஜினி ரசிகராகவே நடிக்க சான்ஸ் கிடைத்திருப்பது பெரிய பாக்கியமாக கருதுவதாக கூறும் சிவகார்த்திகேயன், இந்த படம் முழுக்க நான் ஹீரோ என்பதை மறந்து ரஜினியின் உண்மையான ரசிகனாகவே நடித்திருக்கிறேன் என்கிறார்.